Tuesday, December 11, 2018

Kannadasan quotes

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பார் என இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
அனுபவித்து அறிவது தான் வாழ்வெனில்
ஆண்டவா நீ ஏனெனக் கேட்டேன்
அதற்கு ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அந்த அனுபவம் என்பதே நான்தான் என்றான்

என்று சொன்னார் கவியரசு கண்ணதாசன். அனுபவமே ஆண்டவனை அறிவிக்கும். மெய்ப்பொருளை உணர்த்தும்

சித்தர்களின் தச தீட்சை - பாட்டுசித்தர்

No comments:

Post a Comment