Sunday, December 6, 2015

BABY FORMING @ MONTH VICE GROWTH LEVELS

ஏழு தாதுக்கள் என்பது எதனால்?----------------------உணவிலிருந்து, ரத்தத்திலிருந்து மாம்ஸம், மாம்ஸத்திலிருந்து கொழுப்பு கொழுப்பிலிருந்து நரம்புகள்,நரம்பிலிருந்து எலும்புகள்,எலும்பிலிருந்து ஊன்,ஊனிலிருந்து சுக்ரம்,இப்படி ஏழு தாதுக்கள் அவற்றால் ஆனது சரீரம்,சுக்கிரமும் சோணிதமும் சேர்ந்தால் கர்ப்பம் உண்டாகிறது.அதை இயக்குமிடம் இதயம்.இதயத்தினுள் ஒரு அக்னி உள்ளது.அதில் பித்தமும்,பித்தத்திலிருந்து வாயுவஜம்தோன்றுகிறது.அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை நாடுகிறது.இது இறைவனின் நீதி.யஜுர்வேதம்…..கர்ப்போபநிஷத்1.4ருதுகால சம்போகத்தால் ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகிறது.ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது கடினமாகிறது.இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.மூன்று மாதங்களில் பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.ஐந்தாவது மாதத்தில் பின்புறம் (மூங்கில் போன்ற முதுகு) எலும்பு உண்டாகிறது.ஆறாவது மாதத்தில் வாய்,மூக்கு கண்கள்.காதுகள் உண்டாகின்றன.ஏழாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன.தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால் புருஷனாகவும்,தாயின் வீர்யம் அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும்,இரண்டும் சமமாக இருந்தால் அலியாகவும் ஆகிறது.மனக்கலக்கத்தோடு இருந்தால் குருடர்களாகவும்,முடவர்களாகவும்,கூனர்களாகவும்,குள்ளர்களாகவும்பிறக்கிறார்கள்.ஒன்றுக்கொன்று வாயுவினால் பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால் அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.யஜுர்வேதம்…..கர்ப்போபநிஷத் 3கர்பத்தில் இருக்கும் போது தாயார் உண்டதும் பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில் பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை திருப்தியடைகிறது.பிறகு ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் பரிபூரண நிலையை அடைகின்றன.அப்போது அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம் வருகிறது. தான் செய்த புண்ணிய செயல்களையும்.பாபச்செயல்களையும்உணர்கிறது.முன்பு என்னால் ஆயிரக்கணக்கான யோனிகள் பார்க்கப்பட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்ட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்ட்டும்.பலவிதமான ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும் ஆகிவிட்டன.திரும்பத்திரும்ப பிறந்தும் இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார் பயனை அனுபவித்துவிட்டு போய்விட்டார்கள். நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன். யோனியினின்று வெளிவந்தால் இனி நான் பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை நாராயணனை சரணடையப்போகிறேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் இனி நான் பாபத்தை போக்குவதும் கருமப் பயனிலிருந்துவிடுதலையளிப்பதுமான ஞானமார்க்கத்தை அப்பியாசம் செய்வேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் பிரம்மத்தை தியானிப்பேன் என்று எண்ணுகிறான்.பிறகு யோனித்துவாரத்தை அடைந்து இயந்திரத்தால் பீடிக்கப்ட்டவனைப்போல மிகுந்த துன்பத்திற்குள்ளாகி பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால் தொடப்பட்டு நினைவிழந்து முற்பிறவியையோ புண்ணிய பாபச்செயல்களையோ எதையும் அறிவதில்லை.

No comments:

Post a Comment