Saturday, May 26, 2018

அற்புத வாழ்க்கை

**

*அப்பன்*
*உயிர்துளி*
*கொடுத்து..*

*அம்மை*
*உயிரை*
*சுமந்து..*

*தொப்புள்*
*கொடி*
*உயிர் வளர்ந்து..*
*பத்து மாதம்*
*கருவறை*
*இருட்டில்*
*மூச்சுபயிற்சி*
*கண்டு*
*பூமியின்*
*வெளிச்சத்தில்*
*வந்து விழும்*
*குழந்தை*

*வித்தியாசமான*
*உருவம்*
*கொண்டு*
*வேற்றுமையான*
*எண்ணம்*
*கொண்டு*
*மனிதாபிமான*
*குணம்*
*கொண்டு*
*ஆண்டவன்*
*விருப்பபடி*
*நிறம்*
*கொண்டு*

*வளர்ந்து*
*வாழ்ந்து*

*நல்லதும் கண்டு*
*கெட்டதும் கண்டு*

*சுகமும் கண்டு*
*அவமானமும் கண்டு*

*ஒவ்வொருவரும்*
*ஒவ்வொரு*
*வித்தியாசமான*
*அனுபவம்*
*கண்டு*

*இது தான் உலகம்*
*இது தான் வாழ்க்கை*

*இது தான் பாதை*
*இது தான் பயணம்*
*என்று*

*தெளிவதற்குள்ளே*
*விதி சதி செய்து*
*இயற்கை*
*மாற்றம்*
*கொண்டு*

*உடலை வளர்த்து*
*அறிவை வளர்த்து*

*நட்பை வளர்த்து*
*எதிர்ப்பை வளர்த்து*

*கோழையை எதிர்த்து*
*வீரத்தை வளர்த்து*

*படிப்பு கண்டோம்*
*தினமும்*
*பிடித்த உணவு* *உண்டோம்*

*வேலை கொண்டோம்*
*உழைப்பு கொண்டோம்*

*பணம் கண்டோம்*
*திமிர் கொண்டோம்*

*ஆணவம் கொண்டோம்*
*அறியாமை கொண்டோம்*

*ஏளனம் கொண்டோம்..*
*எளிமை துறந்தோம்*

*பழைய நிலை மறந்து*
*பணம் கண்டு புது*
*வாழ்க்கை*
*வாழ்ந்தோம்*

*பணம் கண்டு பாசம்*
*என்ற வேசம்* *கொண்டோம்..*

*மனைவி மக்கள்* *கண்டோம்..*
*பேரப்பிள்ளை*
*கண்டு*
*பேரின்பம் கண்டோம்..*

*ஒருநாள்*
*அப்பன் உயிர்துளி*
*வெளுத்து சாயம் போக*

*அம்மை கொடுத்த*
*உயிர் போக*

*உணவு உண்டு*
*வளர்ந்த உடல்*
*மட்டும்*

*அனாதையாய்*
*இடுகாட்டில்*
*நெருப்பின்*
*வாயில்போக*

*பெத்தவளும் வர* *தயாராக இல்லை..*

*பெத்தவனும் வர*
*தயாராக இல்லை ..*

*உள்ளத்தாலும்* *உடலாலும் இணைந்து*
*வாழ்ந்த கட்டிய* *மனைவியும்*
*வர தயாராக*
*இல்லை..*

*பெத்த சீர்மிகு* *பிள்ளையும்*
*வர தயாராக இல்லை..*

*பேரின்பம் அடைந்த*
*ஆயிரம் முத்தம் நீ*
*கொடுத்த* *பேரப்பிள்ளையும்*
*உடன் வர*
*தயாராக இல்லை..*

*உன்னுடைய*
*உயிர் போனால்*
*சகலமும் போனது..*

*உடல் நெருப்போடு* *போனது..*

*பணம் வீட்டோடு*
*நின்றது ..*

*பாசம்*
*சுடுகாட்டோடு*
*போனது..*

*கடைசி வரை*
*யார் வருவார்*

*என்று*
*அறியும் ஆற்றல்*
*எவன் அறிவான்*
*அகிலத்தில்..*

*அனுபவத்தோடு*
*சேர்ந்த*
*கர்மவினையும்..*

*பாவமும்*
*புண்ணியமும்*
*கடைசி வரை வந்து*
*சேர்ந்தது..*

*ஆத்மா மட்டுமே*
*ஆண்டவனை*
*அடைந்தது..*

*சுடுகாட்டு*
*வெந்தணலில்*
*ஒரு கை பிடி*
*சாம்பல் மட்டுமே*
*மிஞ்சியது..*

*அறுபது வருடம்*
*இல்லை*
*நூறு வருட*
*வாழ்விற்கு*
*மிச்சம்..*

*இவ்வுளவுதான்..*
*வாழ்க்கையில்..*
*இப்பூவுலகில்*

*எதுவும் உடன் வர* *முடியாது*
*என்று*
*தெளிந்த*
*நமக்குள்*
*எதற்கு இந்த*
*கேவலமான*
*வஞ்சம்*
*வக்கிரம்*
*பொறாமை*
*ஏளனம்*
*வரம்பு மிறி பேச்சு*
*தகுதி மிறி ஆசை..*
*பொறுமையோடும்*
*எளிமையோடும்*
*நல்ல எண்ணத்தோடும்*
*வாழ்ந்தால்*
*போகும் பாதை*
*கடைசியில்*
*மோச்சத்திற்கு*
*வழி வகுக்கும்..*

*நாம் வாழும் காலத்தில்*

*போட்டி             இன்றி*
*பொறாமை     இன்றி*
*காமம்                இன்றி*
*குரோதம்       காட்டாமல்*
*களவு           செய்யாமல்*
*பேராசை   கொள்ளாமல்*

*அடுத்தவரின் குடியை* *கெடுக்காமல்*

*வாழ கற்றுக்*
*கொள்ளுங்கள்*

*பிறரின் தவறை* *மன்னித்து பழகுங்கள்* 

*தன்னிடம் ஆயிரம்* *கறைகள்* 
*ஆயிரம் குறைகள்*
*அவற்றை நீக்க*
*முயற்சியுங்கள்*

*பிறரை பழிக்காதீர்கள்*

*நல்ல வண்ணம்*
*வாழலாம்*

*வாழ்வில் வளம்*
*பெறலாம்*

*வாழ்க வளமுடன்* *வளர்க நலமுடன்...*
நட்புடன் ............

🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻

No comments:

Post a Comment