Friday, April 22, 2016

ஏழு சக்கரங்களின் இயக்கத்தினால்தான

ஏழு சக்கரங்களின் இயக்கத்தினால்தான் மனித உயிர் தங்குகிறது
7 என்றாலே புனிதமும் மகத்துவமும் வாழ்வில் இன்றியமையாததும் ஆகும் !
இந்த ஏழு சக்கரங்களின் இயக்கத்தினால்தான் மனித உயிர் தங்குகிறது.
அவை
மூலாதாரம்,
ஸ்வாதிஷ்டானம்,
மணிப்பூரகம்,
அனாகதம்,
விஷீத்தி,
ஆக்ஞா,
சகஸ்ரஹாரம்.
வீரிய சக்தியான மூலாதாரம் முதுகெலும்பின்
கடைசிப்பகுதியில் (நமது மலத்துவாரத்துக்கு சற்று மேலே)
அமைந்துள்ளது.
இது விநாயகரின் ஆசி பெற்ற இடமாகும்.
ஐம்பூதங்களில் இது மண்ணுக்குரியது.
ஆசாபாசங்கள்,மனிதனின் அடிப்படை உணர்வுகள் மற்றும்
சிருஷ்டிக்குரிய ஸ்வாதிஷ்டானம் தொப்புளுக்குக்
கீழே அமைந்துள்ளது.
இது அக்கினிக்குரியது.
தொப்புள் பகுதியில் அமைந்துள்ளது மணிப்பூரகம்.
இது பயம்,பதற்றத்துக்குரியது.
இது பஞ்சபூதங்களில் நீருக்குரியது.
இது பெண்களுக்குரிய சக்தி மையம் ஆகும்.
இரண்டு மார்புகளுக்கு நடுவே அமைந்திருப்பது அனாகதம்.
கருணை,அன்பு போன்றவற்றின் இருப்பிடமான இது
ஐம்பூதங்களில் காற்றிற்குரியது.
தொண்டைக்குழியில் இருப்பது விசுத்தி.
சிந்தனை,சுதந்திர உணர்வு,தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்
திறன் ஆகிவற்றிற்குக் காரணகர்த்தாவான இது
ஆகாயதத்துவத்தின் அடிப்படையில்
இயங்கிவருகிறது.
புருவத்தின் நடுப்பகுதியில் இருப்பது ஆக்ஞா.
இது உள்ளுணர்வின் இருப்பிடம் ஆகும்.
ஐம்பூதங்களில் மனதின் சக்தியிது.
சஹஸ்ரஹாரம் உச்சந்தலை தியானமும்,
பிரபஞ்ச பிரக்ஞையும் பிறக்குமிடம்.

No comments:

Post a Comment