Tuesday, October 25, 2016

விவேகானந்தரின் ஆற்றல்

விவேகானந்தரின் ஆற்றல்
---
தூங்கிக் கிடந்த பாரதத்தைத் தட்டியெழுப்பியவர் விவேகானந்தர். அடிமை நாடாகக் கிடந்த இந்தியாவை இன்று உலகின் முன்னணி நாடுகளுடன் நடைபோட வைத்திருப்பது விவேகானந்தரின் ஆற்றல். இந்த ஆற்றல் அவருக்கு எங்கிருந்து வந்தது?
அதனை அவரது வார்த்தைகளிலேயே காண்போமா?
விவேகானந்தர் சிகாகோ சர்வமத மகாசபையில் கலந்துகொண்டதும் அதில் வெற்றிவீரராக பவனி வந்ததும் நாம் அறிந்ததே! மகாசபை நிகழ்ச்சியைச் சற்றுப் பார்ப்போம்
சர்வமத மகாசபையில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களும் துறவியரும் கலந்துகொண்டிருந்தனர். அவர்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து தங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கேட்டுக்கொண்டனர். காலையில் நிகழ்ச்சிகள் தொடங்கின.
ஆனால் நிகழ்ச்சிகளை நடத்துபவர் பலமுறை அழைத்தும் விவேகானந்தர் எழுந்து போகவில்லை; ‘இப்போது இல்லை, பிறகு’ என்று தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார். நண்பகல் கடந்து மாலையையும் நெருங்கியது. ஒருவேளை இவர் பேசவே மாட்டாரோ என்று மற்றவர்களுக்குச் சந்தேகமே வந்துவிட்டது.
இனி தாமதிக்க முடியாது என்ற நிலைமை வந்தபோது விவேகானந்தர் எழுந்தார். ஒருகணம் கலைமகளை மனத்தில் நினைத்தார். ‘அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே’ என்று அழைத்தார்! ‘அவ்வளவுதான். அவரால் அடுத்த வார்த்தையைப் பேசமுடியவில்லை. அங்கிருந்த அனைவரையும் ஏதோவோர் ஆர்வப் பேரலை ஆட்கொண்டதுபோல் தோன்றியது. நூற்றுக் கணக்கானோர் தங்கள் உற்சாகத்தை அடக்க முடியாமல் எழுந்துவிட்டனர். காதுகளையே பிளப்பதுபோல் அங்கே கரவொலி எழுந்தது’ என்று எழுதுகிறார் அங்கிருந்த ஒருவர்.
தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் விவேகானந்தர் பேச முயற்சி செய்தார். ஆனால் அந்தக் கைதட்டல் ஒலியில் அவரால் பேச முடியவில்லை. இப்படியொரு வரவேற்பா என்று அவர் சற்று ஆடித் தான் போனார்! எழுதுகிறார் அவர்:
‘இசை, விழா, உரைகள் என்று விமரிசையாகப் பேரவை தொடங்கியது. பிறகு பிரதிநிதிகள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப்பட்டனர்; அவர்கள் வந்து பேசினர். என் இதயம் படபடத்தது, நாக்கு அனேகமாக வறண்டே போயிற்று; நடுக்கத்தின் காரணமாக, காலையில் பேச எனக்குத் தைரியம் வரவில்லை. கடைசியாக, மாலையில் பேசுவதற்காக எழுந்தேன். கலைமகளை வணங்கிவிட்டு மேடையில் வந்தேன். ஆரம்பத்தில் “அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!” என்று அழைத்தேன். அவ்வளவுதான், இரண்டு நிமிட நேரம் காது செவிடுபடும்படியான கரகோஷம். அதன்பிறகுதான் உரையைத் தொடர முடிந்தது.’
சிறிய உரைதான்; ஆனால் அது சமய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றின் ஏடுகளில் ஒரு பொன்னிதழாக மாறியது. ‘அவரது வார்த்தைகளில் தீப்பொறிகள் பறந்தன’ என்று எழுதுகிறார் ரோமா ரோலா என்ற பிரெஞ்சு அறிஞர்.
ஆனால் அந்தத் தீப்பொறிகள் சுடுகின்ற கதிர்கள் அல்ல, உலகியல் வெப்பத்தால் வாடிக் கிடக்கின்ற இதயத் தாமரைகளை மலரச் செய்கின்ற குளிர்க் கிரணங்கள்! அதனால் தான் அந்த அரங்கில் அமர்ந்திருந்த அத்தனை இதயங்களும் ஒருசேர ஆர்வத்துடன் ஆர்ப்பரித்தன. ஆயிரம் உள்ளங்களைக் கொள்ளைகொள்கின்ற அந்தத் தெய்வீக ஆற்றல் எங்கிருந்து வந்தது? அது என்ன ஆற்றல்?
விவேகானந்தரின் வார்த்தைகளில் கேட்போம்:
‘சிகாகோவில் எனது முதல் சொற்பொழிவில் நான் எல்லோரையும் “அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே” என்று அழைத்ததும், எல்லோரும் எழுந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அப்படி அவர்கள் பரவசப்பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா? ஏதோ அதிசய ஆற்றல் என்னிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். உண்மை தான். என்னிடம் அத்தகைய ஆற்றல் உள்ளது, அது இதுதான்— ஒருமுறைகூட காம எண்ணம் என்னுள் புக நான் அனுமதித்ததில்லை. என் மனம், எனது சிந்தனை, பொதுவாக மனிதன் அந்த வழியில் செலவழிக்கின்ற என் ஆற்றல்கள் அனைத்தையும் ஓர் உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும் தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றலாக உருவெடுத்தது.’
தூய வாழ்க்கையின் ஆற்றல் அத்தகையது. ‘தூய்மை மற்றும் மௌனத்திலிருந்து ஆற்றல் மிக்க சொற்கள் பறக்கின்றன’ என்பார் விவேகானந்தர்.

ஹிட்லரின் பத்து உபதேசங்கள்!


1) மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.
2) தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
3) ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்.
4) அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.
5) இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!
6) நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே!
7) பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.
8) உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவுசெய்தாள்.
9) நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
10) நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.

தர்மவான்கள் யார் என்று தெரியுமா?

🌠 தர்மம் என்று எதை சொல்வார்கள். பசியென்று வருபவர்களுக்கு ஒரு வாய் சாதம் தருவது, தாகம் என்று கேட்டவருக்கு தண்ணீர் தருவது என்பது தானம் செய்யும் நற்குணத்தை குறிக்கிறது.

🌠 தானம் செய்பவர்கள் அனைவரும் தர்மவான்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒரு செயலின் முக்கியத்துவத்தை அறிந்தே தானத்தின் மதிப்பு இருக்கிறது. அதை பற்றி இங்கு தெரிந்துக் கொள்வோம்.

தர்மத்தில் சிறந்தவர்கள் :

🌠 ஏழைகளுக்கான தர்ம விடுதி அமைத்து தருபவர்.

🌠 படிக்கும் பிள்ளைகளுக்கு உணவு தந்து ஆதரிப்பவர்.

🌠 சாதி மதம் பார்க்காமல் அனைத்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உணவு அளிப்பவர்.

🌠 பசுக்கு உணவளிப்பவர்.

🌠 அனாதைகளுக்கு உணவளித்து ஆதரிப்பவர்.

🌠 அனாதை குழந்தைகளை வளர்த்து காப்பவர்.

🌠 பச்சிளம் குழந்தைகளுக்குப் பால் வழங்குபவர்.

🌠 அனாதைப் பிரேதங்களை அடக்கம் செய்து காரியங்கள் செய்பவர்.

🌠 அனாதைகளுக்கு உடையளிப்பவர்கள்.

🌠 ஏழைகளுக்கு இலவசமாக துணி வெளுத்து தருபவர், வைத்தியம் செய்பவர்.

🌠 பிறரின் துயரை துடைப்பவர்கள், தாகத்திற்கு தண்ணீர் வழங்குபவர்கள்.

🌠 பசு மாடுகள் உடம்பை தேய்த்துக் கொள்ள மந்தைவெளியில் கல் நடுதல், சக்தியற்ற எல்லாவிதமான விலங்குகளுக்கும் உணவளித்தல்.

🌠 மாடுகளை விருத்தி செய்ய, பொலி காளைகளை இலவசமாய் விடுதல்.

🌠 விலை கொடுத்தாவது பிறர் உயிர்களைக் காப்பாற்றுபவர்கள்.

🌠 சிறந்த தான தர்மம் என்பது தர்மம் செய்பவரின் நிலையை பொருத்ததல்ல. தானத்தை பெறுபவர்களின் நிலையை பொறுத்ததே.

🌠 தர்மம் செய்வதினால் மன நிறைவு கிடைப்பதோடு செய்த பாவங்களிற்கும் பரிகாரம் செய்வது போல் ஆகும்.

அன்பும் கருணையும்


வேதாத்திரிதாசன் மாதவன்

அன்பு - ஒர் உணர்வு;
கருணை - என்பது அன்பின் அடிப்படையில் செய்யும் ஒரு செயல்.

அன்பு அக உணர்வு;
கருணை புற விளைவு.

அன்பு என்பதைச்சொல்லித்தர கல்லூரிகளோ பட்டம் அளிக்க கூடிய பல்கலைக்கழகங்களோ இவ்வுலகில் எங்கும் இல்லை. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் - வ்ள்ளலாரின் அன்பின் வெளிப்பாடு. அதுவே மகரிஷின் இரண்டொழுக்கப்பண்பாடு.

1. எனது வாழ்நாளில், எவ்வுடலுக்கும், உயிர்க்கும் துன்பம் தர மாட்டேன் - இது அன்பு.
2. எல்லா உயிர்க்கும் துன்பம் போக்க, என் உதவிகளைச்செய்வேன். - இது கருணை.

நாம் அன்பு காட்டுகிறோமா, இல்லையா என்பது நமக்கு மட்டும் தான் தெரியும். அதையே வாய் வழியாக சொன்னால் வெறும் விளம்பரம். ஆனால் அதை செயல் வழி காட்டும் பொழுது தான் அன்பு கருணையாக – உதவியாக, தொண்டாக, சேவையாக மாற்றம் பெறுகிறது. அதணால் தான் என்னவோ மகரிஷி தன்னை உலக சமுதாய சேவா தொண்டன் என்று எளிமையாக வாழ்ந்தார்.

சேவை, தொண்டு என்பது பல லட்சம் நன்கொடை தருவதாலோ அல்லது பெறுவதாலோ வருவது அல்ல. ஒருவன் தன் உடல் / மன / சிந்தனை உழைப்பை அன்போடு தருவதால் மட்டுமே வருவது. அதணால் தான் மகரிஷி, மகான் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். மற்றவர்கள் தலைவராக இருப்பதால் பயத்தோடு பக்தியால் வணங்கப்படுகிறார்கள். முதல்வராக இருப்பதால் தான் அதீத மரியாதை, இல்லையென்றால் அவமரியாதை கிடைப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

மனிதன் அவன் மனம் கொண்டு அளக்கப்படுகிறான்; அவன் வருமானம் கொண்டு அளக்கப்படுவதாக நினைத்து கற்பனை வலையில் சிக்கி சீரழிகிறான். அதணால் மனதை மனிதனை வளப்படுத்துவது என்பது அன்பு / கருணை இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை வலியுறுத்தி சாதனையை வேண்டுகிறார் மகரிஷி. வெறும் போதனையைக் கண்டு மக்கள்
மன வேதனையில் வாடுகிறார்கள் என்பது தான் உண்மை.

அன்பு செய்வோம், அறம் வளர்ப்போம்;
கருணை தொண்டு செய்வோம்;
மனித வளம் வளர்ப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

செல்: 0 98860 67232;
இமெயில்: dr.madhavan@glowhy.org
வலைதளம்: www.glowhy.org

வெற்றி

*4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !

*8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

*12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

*18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

*22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !

*25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

*30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

*35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

*45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !

*50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

*55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

*60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

*65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

*70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

*75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !

*80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

     *Be defeated to become victoriuos.*

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?

✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*

✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*

✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*

✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*

✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*

✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*

✌ *ஆகவே தோற்று போ,*

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

*”வாழ்க வளமுடன்”*

தோல்வி என்றால்...என்ன ?


👏👏👏👏👏👏👏👏👏👏👏
தோல்வி
என்றால் நீங்கள் தோற்றவர் என்று
பொருள் அல்ல. நீங்கள் இன்னும்
வெற்றி பெறவில்லை என்று
பொருள்.

தோல்வி
என்றால் நீங்கள் எதையுமே
சாதிக்கவில்லை என்று
பொருள் அல்ல. சில
பாடங்களைக் கற்றுக்கொண்டு
இருக்கின்றீர்கள் என்று
பொருள்.

தோல்வி
என்றால் நீங்கள் அவமானப்பட்டு
விட்டதாக பொருள் இல்லை.
முயன்று பார்க்கும் துணிவு
உங்களிடம் உள்ளது என்று
பொருள்.

தோல்வி
என்றால் வாழ்க்கை வீணாகி
விட்டதாகப் பொருள் இல்லை.
மீண்டும் ஆரம்பிக்க ஒரு
வாய்ப்புக் கிடைத்துள்ளது
என்று பொருள்.

தோல்வி
என்றால் விட்டு விட
வேண்டும் என்று பொருள்
அல்ல இன்னும் செம்மையாக
உழைக்க வேண்டும் என்று
பொருள்.

தோல்வி
என்றால் உங்களால் அடைய
முடியாது என்று பொருள்
அல்ல அடைய கொஞ்சம் காலம்
தாமதமாகலாம் என்று பொருள்.

தோல்வி
என்றால் கடவுள் உங்களைக் கை
விட்டு விட்டார் என்று
பொருள் இல்லை. உங்களுக்கு
வேறு நல்ல எதிர்காலத்தை
நிர்ணயம் செய்து வைத்து
இருக்கிறார் என்று பொருள்..

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்குங்கள்!

👍
📮 கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள்... ஆனால் உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮நான் உங்களை பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டுமானால், நீங்கள் என் எதிரியாக இருக்க வேண்டும்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮முடி வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி வளர்ப்பதற்கு யாரும் எடுக்கிறதில்லை...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮அனைவரும் ஆவேசத்துடன், முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால், நம்மையும் மிதித்துத் தாண்டிச் சென்று விடுவார்கள்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮தன்னைப் புலி என்று நினைக்கும் எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பவனுக்கு நிஜ வாழ்வில் நண்பர்கள் இல்லாமல் இருப்பதும் இணைய வாழ்வில் நிறைந்து இருப்பதும் விசித்திர முரண்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮அம்மா சமைத்த அமுதை விஷமாக்கினேன் பிளாஸ்டிக் டப்பாக்குள் அடைத்து...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்.. கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮மரங்கள் மட்டும் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டுத் தள்ளியிருப்போம்... ஆனால் பாவம், மரங்களால் சுவாசிக்க "ஆக்சிஜன்" மட்டுமே தர முடிகிறது...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮துரோகத்துக்கும், அவமானத்திற்கும் பிறகும் வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮அனைத்து அன்னையும் உயர்ந்தவர்கள் அல்ல... ஏனெனில்... சில குழந்தைகள் குப்பை தொட்டியிலும் கிடைக்கின்றன...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

காமாட்சி_விளக்கு

# ❕❕

விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது. பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளனர்.

சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள் கின்றனர். புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன்திருவிளக்கே.

புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, "நிறைநாழி'' எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் மீது தீபம் ஏற்றப்படும். பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம்.

மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.

குத்து விளக்கு :
குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து-நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம். ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன் கிடைக்கின்றன.
உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக் குரியவையாகவும் ,சில அலங்காரத்திற்கு உரியவையாகவும் விளங்குகின்றன.

பாவை விளக்கு :
ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது. இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம் .

தீபங்கள் பதினாறு :
தூபம், தீபம் புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ் (அன்னம்) தீபம், கும்ப (குடம்) தீபம், குக்குட (கோழி) தீபம், விருக்ஷ தீபம், கூர்மா (ஆமை) தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.

தூக்கு விளக்குகள் ஒன்பது :
1. வாடா விளக்கு
2. ஓதிமத்தூக்கு விளக்கு
3. தூண்டாமணி விளக்கு
4. ஓதிம நந்தா விளக்கு
5. கூண்டு விளக்கு
6. புறா விளக்கு
7. நந்தா விளக்கு
8. சங்கிலித் தூக்கு விளக்கு
9. கிளித்தூக்கு விளக்கு.

பூஜைவிளக்குகள் ஒன்பது :
சர்வராட்சததீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாகர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும்.

கைவிளக்குகள் ஏழு :
கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, சம்மனசு விளக்கு, கணபதி விளக்கு, கைவக் விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும்.

நால்வகை திக்பாலர் தீபங்கள் :
ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.

அஷ்டகஜ தீபங்கள் எட்டு :
ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சர்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்.