சஞ்சித கர்மம் பதிவாகி இருக்கக் கூடிய இடம் கருமையம். ஆகவே அது அவ்வளவு சுலபமாக போக்கி விட முடியாது. நீண்ட காலம் துரிய தவம் செய்வதும், துரியாதீதத்தை ஆழ்ந்த செய்வதும், இதற்கு உதவும். இதை எடுத்துக் கூறக் கூடிய செய்யுள் ஒன்று உண்டு. அது
”தன்னை யறிந்த தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையை பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே”
சென்னியில் வைத்த சிவனருள் என்பது துரியம், துரியாதீதத்தைக் குறிக்கும். முன்னை வினை என்பது பிராரப்த, சஞ்சித கர்மங்கள்.
துரியாதீதம் செய்யும் போது நமது கருமையம் இறைநிலையோடு இணைகிறது. இறைநிலை என்ற பெரு வெள்ளம் பரிபூரணமான தூய்மையுடையது என்பதால் அதனோடு இணைகின்ற போது நமது கருமையரும் கொஞ்சம் கொஞ்சமாகத் தூய்மை பெற்று விடுகிறதுசஞ்சித கர்மம் பதிவாகி இருக்கக் கூடிய இடம் கருமையம். ஆகவே அது அவ்வளவு சுலபமாக போக்கி விட முடியாது. நீண்ட காலம் துரிய தவம் செய்வதும், துரியாதீதத்தை ஆழ்ந்த செய்வதும், இதற்கு உதவும். இதை எடுத்துக் கூறக் கூடிய செய்யுள் ஒன்று உண்டு. அது
”தன்னை யறிந்த தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையை பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே”
சென்னியில் வைத்த சிவனருள் என்பது துரியம், துரியாதீதத்தைக் குறிக்கும். முன்னை வினை என்பது பிராரப்த, சஞ்சித கர்மங்கள்.
துரியாதீதம் செய்யும் போது நமது கருமையம் இறைநிலையோடு இணைகிறது. இறைநிலை என்ற பெரு வெள்ளம் பரிபூரணமான தூய்மையுடையது என்பதால் அதனோடு இணைகின்ற போது நமது கருமையரும் கொஞ்சம் கொஞ்சமாகத் தூய்மை பெற்று விடுகிறது
No comments:
Post a Comment