Saturday, March 14, 2020

பழனி மூட்டை சாமிகள்

🔱 *பழனி மூட்டை சாமிகள்* 🔱
       பழனி அருகே கணக்கன்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து என்ற பழனி சுவாமிகள். எப்போதும் அழுக்கு மூட்டைகளுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்ததால் இவர் மூட்டைசித்தர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

பழநியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கணக்கன்பட்டி. சிறு கிராமம். இங்குள்ள டீக்கடை, மளிகைக்கடை, பஞ்சர் கடை, பெட்டிக்கடை என்று எல்லா கடைகளிலும் வீடுகளிலும் இவரது வண்ணப்படம் போட்ட நாட்காட்டி மாட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் தேதி கிழித்து, அவர் முகத்தில்தான் விழிக்கிறார்கள். ஊர்க்காரர்கள் இவரை 'பகவான் ஞான வள்ளல்' என்றும், 'சத்குரு' என்றும் அழைக்கிறார்கள். 'சித்தரின் அவதாரம் இவர்' என்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கிற போலிச் சாமியார்களையும், வேஷதாரிகளையும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். எப்படி? பெரும்பாலும் பெண்கள் பிரச்னையில் சிக்குகிறார்கள். அடுத்ததாக, பக்தர்களிடம் பணம் பறிப்பதில் மாட்டிக் கொள்கின்றனர். ''ஆனால், மூட்டை சுவாமிகள் உண்மையிலேயே ஒரு மகான். ஏனென்றால், கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அவரை இந்த பழநியில் அறிந்தவர்கள் ஏராளம். பழநியில் அவருக்கு பக்தராக இருந்த பணக்காரர்கள் பல பேர். மூட்டை சுவாமிகள் நினைத்திருந்தால் எப்படி எப்படியோ அவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கை முறையே வேறு. நம்மிடம் இருக்கும் குறைகளை அகற்றுவதற்காகவே இவர் அவதரித்திருக்கிறார்.

எவரேனும் இவரிடம் பணமோ, பொருளோ கொடுக்க வந்தால், முதலில் அவர்களை விரட்டி விடுவார். எவரிடம் இருந்தும் சல்லிக் காசு வாங்க மாட்டார். யாரிடமும் எதுவும் கேட்கவும் மாட்டார். இப்போது கூட இவரின் சில பக்தர்கள், இதே கணக்கன்பட்டியில் இவர் தங்குவதற்காக ஒரு 'சித்சபை' கட்டி வருகிறார்கள். அதற்கு இவர் முறையாக ஒப்புதல் தரவில்லை. அந்த அளவுக்கு ஒதுங்கியே இருப்பார்.
பழநி மலைக்கு எதிரே உள்ள இடும்பன் மலை யில் சில காலம் தங்கி இருந்தாராம். பல நேரங்களில் இவர் எங்கு இருக்கிறார் என்பதை பக்தர்கள் எவராலும் கண்டுபிடிக்க முடியாது. உச்சி வேளையில் கொளுத்துகிற வெயிலில் மலைக்கு மேலே தகிக்கிற ஒரு பாறையில் அமர்ந்து தியானத்தில் இருப்பார்; பேயெனக் கொட்டுகிற மழையில் முழுக்க நனைந்தபடி அதே பாறையில் படுத்திருப்பாராம். இயற்கையின் எந்த ஒரு சக்தியும் இவரை பாதித்ததே இல்லையாம்.

மூட்டை சுவாமிகளின் அற்புதங்கள் என்று ஒரு பக்தர் நம்மிடம் சொன்னவை: ''ஒரு மழைக் காலத்தில், அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின் வயர் ஒன்று அறுந்து, நடு ரோட்டில் விழுந்து கிடந்தது. இதைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தனர். சுவாமிகள் ரொம்ப சாதாரணமாகச் சென்று அந்த வயரைத் தன் கையால் எடுத்து அப்புறப்படுத்திப் போட்டார்...

சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறிப் போன சேலத்து பக்தர் ஒருவர், இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார். அங்கு சுவாமிகளைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், 'மூச்சே இல்லை. இறந்து விட்டார்!' என்று ரிப்போர்ட் எழுதி, இவரை மார்ச்சுவரியில் வைத்திருக்கிறார்கள்.

அடுத்த சில மணி நேரங்களில் சுவாமிகள், பழநியில் ஒரு மலையில் தவத்தில் இருந்தாராம். மார்ச்சுவரியில் சுவாமிகள் இருந்த அறையைத் திறந்து பார்த்த ஆசாமிக்கு அதிர்ச்சி... அங்கே இவர் இல்லை.

பழநி கல்லூரியில் வேலை பார்த்து வந்த பேராசிரியர் ஒருவர், இன்ன தேதியில் இறக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லி இருந்தார் சுவாமிகள். எந்த ஞான திருஷ்டி மூலம் சுவாமிகள் சொன்னாரோ தெரியவில்லை...

சுவாமிகள் சொன்ன தேதியில் திடீரென உடல் நலக் குறைவாகி இறந்து விட்டார்.

- இப்படி நிறைய சம்பவங்களை அனுபவங்களாகச் சொல்லலாம்.''

மூட்டை சுவாமிகளின் இயற்பெயர் 'பழனிச்சாமி' என்று ஓர் அன்பர் சொன்னார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வரை மூட்டை ஸ்வாமிகள் வசித்து வந்த இடம்: பழநி- திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பழநி கலைக் கல்லூரி வாசலில். கலர் வேஷ்டி... மேலே ஒரு முழுக்கைச் சட்டை... தலையில் ஒரு முண்டாசு. பெரும்பாலும் வேஷ்டியை மடித்துக் கட்டி இருப்பார். இவர் உடுத்தி இருக்கும் துணிகள் பெரும்பாலும் கந்தலாகவே காணப்படும்.

இவரது இடது தோள்பட்டையில் ஒரு பெரிய மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும். ரொம்ப கனமான மூட்டை. அதற்குள் என்ன இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. புளிய மரத்தின் அடியில், தான் ஓய்வெடுக்கும்போது மரத்தின் ஒரு கிளையில் தன் கண்களில் படும்படி மூட்டையைத் தொங்க விட்டிருப்பார். ஆர்வக்கோளாறின் காரணமாக- சில நேரங்களில் எவரேனும் அந்த மூட்டை அருகே நெருங்கினால் போதும்... கன்னாபின்னாவென்று கத்தி விட்டு, அவர்களை விரட்டி விடுவார். தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்தக் கந்தல் மூட்டையை விடாமல் தூக்கிச் செல்வதால், அந்தப் பகுதிவாசிகளால் 'மூட்டை ஸ்வாமிகள்' என அழைக்கப்பட ஆரம்பித்தார் இவர்.

பழநி கலைக் கல்லூரியின் வாயிலில் ஏராளமான புளிய மரங்கள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றின் நிழலில் இவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார். சில நேரங்கள் திடீரென்று காணாமல் போய் விடுவார். எப்போது வருவார் என்றும் தெரியாது. 'சாமி மலைக்கு மேலே போயிருக்கு' என்பார்கள். அவர் இருக்கும் இடம் இதுதான் என்று பிறரால் அடையாளம் சொல்லக் கேட்டு, அவரைத் தேடி அங்கே போனால் - அவர் இருக்க மாட்டார்.
தெருவில் சுவாமிகள் அவர்பாட்டுக்கு நடந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் உட்காருவார். இங்கு வந்திருக்கிற ஒவ்வொருவருக்கும் உள்ள குறைபாடுகளை அவர் சூட்சுமமாக உணர்வார். வந்திருப்பவர்களின் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் வெறும் வாயில் போட்டு மென்று, அதை வெளியே துப்பி விடுவார். சுவாமிகள் சஞ்சரித்துக் கொண்டிருக்கிற உலகமே வேறு. எனவே, அவரின் அருகே போனால் அது அவருக்குத் தொந்தரவு தருவதாகவே அமையும்.

தவிர, சுவாமிகள் சில நேரங்களில் வந்திருப்பவர்களை விரட்டியும் விடு வார். உடனே, அங்கிருந்து அவர்கள் போய் விட வேண்டும். ரொம்ப நேரம் இவரை தரிசனம் பண்ணிக் கொண்டு இங்கேயே உட்கார்ந்திருக்கலாம் என்று இருக்கக் கூடாது. வந்தோமா, தரிசனம் பண்ணினோமா என்று நகர்ந்து விட வேண்டும்.

சிலரை ஏதோ வேலைகள் செய்யச் சொல்வார். என்ன வேலை தெரியுமா? மண்ணை அள்ளிக் குவிக்கச் சொல் வார். சாக்கடைத் தண்ணீரை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் மாற்றி ஊற்றச் சொல்வார். இதற்கெல்லாம் பக்தர்கள் முகம் சுளிக்கக் கூடாது. இதன் மூலம் அவர்களது வினையை சுவாமிகள் விரட்டுகிறார். அதுதான் நிஜம்.

பொதுவாக சித்தப் புருஷர்கள் ..மகான்கள் தன்னலம் இல்லாதவர்கள். சிலரெல்லாம் இப்பொழுது எப்படி எப்படியோ இருக்கிறார்கள். ஆனால், இவர் ஒரு மாட்டுக் கொட்டகை போன்ற ஒரு இடத்தில்தான் தங்கினார் . எங்கேயாவது சென்று உட்கார்ந்து கொண்டு எதையாவது சொல்லிக் கொண்டு இருப்பார். இதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

இந்த மகான் சமாதி அடைந்தது  (11 -03-2014)

..இப்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டு ,பக்தர்களின் பாவங்களை மூட்டையாக சுமந்து , உலகம் எங்கும் தம் பக்தர்களை காத்து ரட்சித்து அருள் புரியும் பழனி கணக்கம் பட்டியில் வாழும் ஞான வள்ளல் சற்குரு பழனி மூட்டை சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி !!!
               🙏🏻நன்றி🙏🏻

Monday, February 24, 2020

கோவை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள் 🌛

🌜 கோவை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள் 🌛
🎭 சித்தயோகி சாமய்யர் 🎭
    கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் சாலையில் 10.கி,மீ,தொலைவில் உள்ள கணுவாய் என்னும் ஊருக்குச் சென்றால்.அங்கிருந்து 2.கி,மீ,தூரத்திலுள்ள பன்னிமடை கிராமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
    இவர் பிறந்ததும் ஜீவசமாதி ஆனாதும் ஆகஸ்ட் 15-ல் தான்,
➖➖➖➖➖➖
🎭 வெள்ளியங்கிரி சுவாமிகள் 🎭
     கோவைக்கு மேற்கே 30.கி,மீ,தொலைவில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈசா யோகா சென்டருக்கு சற்று முன்னதாக இருக்கும் முள்ளங்காட்டில் இவரது ஜீவசமாதியும்,ஆசிரமும் உள்ளது,
➖➖➖➖➖➖
🎭 கணபதி சுவாமிகள் 🎭
      கோவைக்கு அருகிலுள்ள சூலூர் ராசிபாளையம் என்னும் கிராமத்தில் 30-5-1913-ல் பிறந்தார்,இவர் ஜீவசமாதி உடையாம் பாளையத்தில் உள்ளது,
➖➖➖➖➖➖
🎭 குமாரசாமி சித்தர் 🎭
     கோவையிலிருந்து 40.கி,மீ,தொலைவிலுள்ள பூராண்டான் பாளையத்தில் பஞ்சவேல் முருகன் கோயிலில் இவரது ஜீவசமாதி உள்ளது,
➖➖➖➖➖➖
🎭 கோடி சுவாமிகள் 🎭
   இவரது ஜீவசமாதி பொள்ளாச்சியிலிருந்து 20,கி,மீ, தொலைவில் உள்ள புரவிப்பாளையம் கிராமத்தில்   உள்ள ஜமீன்தார் அரண்மனை வளாகத்தில் உள்ளது,
➖➖➖➖➖➖
🎭 மகான் கோபால் சுவாமிகள் 🎭
      உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி சாலையில் செடிமேடு என்னும் இடத்தைத் தாண்டி இருக்கும் லட்சுமணபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிச் சென்றால் வரும் சித்தவாடி கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது.
➖➖➖➖➖➖
🎭 அழுக்குச் சுவாமிகள் 🎭
     பொள்ளாச்சிக்கு அருகே ஆனைமலை தாண்டி உள்ள வேட்டைக்காரன் புதூரில் ஓடும் உப்பாற்றங்கரையில் வேட்டைக்கார சுவாமி கோயிலுக்கு வடபுறம் இவரது ஜீவசமாதி உள்ளது,
➖➖➖➖➖➖
       கோவை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள் முடிவுற்றது,
      🙏🏻 நன்றி 🙏🏻
      🌹 நற்பவி 🌹

Thursday, February 13, 2020

பிரண்டையின்

பிரண்டையின் மருத்துவக்குணங்களைத் தெரிந்துகொள்வோமா?
கால்சியம் குறைவு, நினைவுத்திறன் இல்லை, உடலில் மந்தம், மூலத்தால் அவதி, எலும்புக்குறைபாடு இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகளை மொத்தமாக சந்தித்தாலும் தீர்வுக்கு ஒன்றை பயன்படுத்தினாலே போதும்... அதன் பெயர்தான் பிரண்டை
ஹைலைட்ஸ்எலும்பு முறிவு பிரச்னைக்கு மாத்திரைகளை விட வீரியமாக செயல்படுகிறது பிரண்டை
மந்தமாக இருக்கும் குழந்தையின் மூளையைத் தட்டி எழுப்புவதற்கு பிரண்டைத்துவையல் போதும்.
ஆண்மையைப் பெருக்கும் அற்புத மருந்தாக இருக்கிறது பிரண்டை உப்பு.
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். மாத்திரைகள் இல்லாமல் மருத்துவர் உதவி இல்லாமல் என்று நினைப்பவர்கள் பாரம்பரிய உணவு முறையைக் கடைப்பிடித்தால் போதும். மூலிகை பொருள்களை யும் உணவாக்கி அதையே உடலுக்கு மருந்தாக்கி வாழ்ந்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருளில் முக்கி யமானவை பிரண்டை.
பிரண்டை என்றால் என்ற கேள்விக்கு இடமில்லாமல் மருத்துவர்களும் இன்று பிரண்டையின் முக்கியத்து வத்தை உணர்த்துவதாலோ என்னவோ மக்கள் பிரண்டையை நோக்கி படையெடுக்கதொடங்கியிருக்கிறார் கள். சாதாரணமாக பத்துரூபாய்க்கு கிடைக்கும் பிரண்டையின் பயன் பலநூறு நோய்களை வரவிடாமல் தடுக் கும் என்கிறார்கள் முன்னோர்கள்.

பிரண்டையில் என்னவெல்லாம் இருக்கு என்பதை தெரிந்துகொண்டால் இனி உங்கள் வீட்டிலும் வாரம் ஒரு முறை பிரண்டை சமையல் இருக்கும்.

அழகும் ஆரோக்யமும் வஞ்சமில்லாமல் தரும் மஞ்சள்

பிரண்டை அறிவோம்
இதற்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு. சாதாரண பிரண்டை, உருட்டுப்பிரண்டை, தட்டைப்பிரண்டை, முப் பிரண்டை என்று பல வகைகள் இருந்தாலும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டைதான் நாம் அதிகம் காண்கிறோம். இதைத் தான் நாம் உபயோகப்படுத்துகிறோம்.

பிரண்டையின் கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டையாக இருக்கும். விதைகள் வழவழப்பாக இருக்கும். பூக் கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதை வளர்ப்பதற்கு அதிக மெனக்கெடல் வேண்டியதில்லை. ஒரு பற்றை எடுத்துவந்து வைத்தால் போதும் அவை வேகமாக கொடி போல் பற்றிக்கொண்டு வளரும்.

பிரண்டையின் சாறு உடலில் பட்டால் நமைச்சலும், அரிப்பும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரண் டையின் வேரும் தண்டும் மருத்துவப்பயன்களை உள்ளடக்கியது. பிரண்டை ஆயுர்வேத மூலிகை என்று அழைக்கப்படுகிறது

வாயுக்களை விடுவிக்கும்.
வாயுக்கள் அதிகமாகும் போது நமது உடலில் இருக்கும் எலும்புகள் சந்திக்கக்கூடிய பகுதிகளில் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இவை உடலில் வலிகளை உண்டாக்கும். இந்த நீர் தான் வாயு நீர் என்றழைக்கப்படுகிறது. இவை முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பசைபோல் கழுத்துப் பகுதி வழியாக இறங்கி வழி யெங்கும் இறுகி முறுக்கும்.

இதனால் தீவிர கழுத்துவலி, முதுகுவலி, கால்வலி போன்ற உபாதைகள் உண்டாகும். பிரண்டையைத் துவை யலாக்கி சாப்பிடுவதன் மூலம் இந்த வாயுநீர் வெளியேறும். மேலும் வாயு நீர் சேராமல் தடுக்கும். வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் வலுவான உடலை பெறுவார்கள்.
எப்படி செய்வது பிரண்டைத் துவையல்
முற்றல் இல்லாத இளம் பிரண்டையை வாங்கி தோல் நீக்கி நார் எடுத்தபிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இவை கைகளில் நேரடியாக படும்போது நமைச்சல் மற்றும் அரிப்புகளை உண்டாக்கும் என்பதால் கைகளில் எண்ணெய் தடவிகொண்டு நறுக்குவது நல்லது.

நறுக்கிய பிரண்டை துண்டுகள்-1 கப், உ.பருப்பு- கால் கப், காரத்துகேற்ப வரமிளகாய், புளி- கோலி அளவு, தேங்காய்- சிறுதுண்டு ,உப்பு- தேவைக்குசேர்த்து வாணலியில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.

ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் இந்தப் பிரண்டை துவையலை இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்துக் கும் தொட்டு கொள்ளலாம். உதிரான சூடாக இருக்கும் உதிரான சாதத்தில் இலேசாக நல்லெண்ணெய் வைத்து கலந்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் இப்படி கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார்கள். இதனால் சிறுவயது முதல் உடலில் வாயுநீர் தங்காமல் இருக்கும்.
எலும்பை வலுப்படுத்தும்
கால்சியம் மாத்திரைகள் எலும்புகளின் உறுபத்திக்கு நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் பிரண்டயை விடாமல் சாப்பிட்டாமல் எலும்புகள் வலுப்படுவதோடு எலும்புகள் விரைவில் உடை யவோ, விலகவோ செய்யாது.

மூட்டுகளில் வீக்கம், வலி, சுளுக்கு போன்ற உபாதைகள் உண்டாகும் போது பிரண்டையை பற்றாக்கி போட் டால் வலி நாளடைவில் பறந்துவிடும். பழங்கால சிகிச்சை முறையில் இதைத்தான் நமது முன்னோர்கள் பயன் படுத்தி எலும்பு குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரண்டை எலும்பு உயிரணு பெருக்கத்தை அதிகரிக்க செய்கிறது.

மூட்டுகளின் இயக்கம் சீராகவும் தீவிரமான கீல்வாத நோயால் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கும் வலி யின் தீவிரம் மற்றும் அழற்சியைக் குறைக்க பிரண்டை உதவுகிறது.

எலும்பு பலவீனமானவர்களின் எலும்புகளை பலப்படுத்தவும் எலும்பு மூட்டுகளை வலுப்படுத்தவும் எலும்பின் அடர்த்தியையும் அதிகரிக்க உதவுகிறது பிரண்டை. எலும்பு முறிவு சிகிச்சை எடுத்துகொண்டிருப்பவர்கள் மாத்திரைகளோடு பிரண்டைத்துவையல், பிரண்டை தோசை, பிரண்டை குழம்பு இவற்றோடு பிரண்டைக் கட்டையும் பயன்படுத்தலாம்.

வாயுத் தொல்லையை விரட்டும் வீட்டு மருத்துவம்

எப்படி போடுவது
பிரண்டையுடன் கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து இரும்பு வாணலியில் விழுதை சேர்த்து வதக்கி வலி, சுளுக்கு, முறிவு ஏற்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து போட்டு வந்தால் வலியின் தீவிரம் நிச்சயம் குறையும். உடைந்த எலும்புகள் சீக்கிரம் இணையும். இதை அடுத்த பரிசோதனையில் கண்கூடாக காணலாம்.
மாதவிடாயிலும் பிரண்டை
மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு என்பது சமீப காலமாக அதிகரித்துவருகிறது. ஒழுங்கற்ற மாத விடாய், மாதவிடாய்க் காலங்களில் அதிக உதிரப்போக்கு என்று அவதிப்படுபவர்கள் பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இந்தப் பிரச்சனை வராமல் பாதுகாத்துகொள்ளலாம்.

எப்படி சாப்பிடலாம்
பிரண்டையை நறுக்கி சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து குடித்துவந்தால் சீரற்ற மாதவிடாய் சீராகும். மாதவிடாய்க் காலங்களில் முதுகுவலி இடுப்புவலி என்று அவதிப்படும் பெண்கள் பிரண்டையை மாத விடாய் வருவதற்கு ஒருவாரம் முன்பு எடுத்துகொண்டால் வலியிலிருந்து தப்பிக்கலாம். இவைத் தவிர பிரண் டைத் துவையலும் சாப்பிடலாம்.
மூல நோய் ஒழியும்
வயிற்றில் செரிமானசக்தி குறைவாகும் போதும் குழந்தைகள் மந்தமாக இருக்கும் போதும் பிரண்டைத் துவை யலைக் கொடுக்கலாம். இது செரிமானத்தைத்தூண்டி ஜீரணத்தை எளிதாக்கும். மூலநோய், ஆசனவாயில் அரிப்பு, மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் ஆரம்ப நிலையிலேயே கண்ட றிந்து பிரண்டையை சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் மூலநோய் குணமாகும் என்கிறார்கள் அனுபவமிக்க பெரியோர்கள்.

எப்படி சாப்பிடுவது
பிரண்டையைச் சுத்தம் செய்து நறுக்கி நெய்யில் வதக்கி இலேசாக உப்பு சேர்த்து காலையும் மாலையும் உட் கொண்டு வந்தால் மூலம் கட்டுப்படும்.

காணாமல் போகும் நோய்கள்
பெரும்பாலானோருக்கு இன்று காணப்படும் முக்கியமான நோய்களான இரத்த அழுத்தம், இதய நோய், நீரி ழிவு கட்டுப்பட பிரண்டை உதவுகிறது.

இரத்தக்குழாய்களில் தேங்கி நிற்கும் கெட்ட கொழுப்புகள் உடலில் இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து இதயத்துக்கு இரத்தம் செல்வதைக் குறைக்கிறது. இந்த கொழுப்புகளை வெளியேற்றி இரத்த ஓட்டத்தைச் சீர் செய்கிறது பிரண்டை.
குடல் புண், இரைப்பை அழற்சி, வயிற்றுப்பொருமல், சிறுகுடல், பெருங்குடல், புண் போன்றவற்றை நீக்கவும் துணைபுரிகிறது. பல் சொத்தையும் பல் ஈறுகளும் பல் கூச்சமும், பல் வலியும் என மொத்தமாய் காணாமல் போக பிரண்டை உதவுகிறது. குடலில் இருக்கும் புழுக்களை வெளியேற்ற பிரண்டை போதும் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். பிரண்டைத்துவையல் போல் பிரண்டை இலை துவையலும் இதற்கு உதவுகிறது.
பிரண்டைத் துவையலைஎப்படி செய்வது
பிரண்டை இலை- ஒரு கப், இஞ்சி,பூண்டு விழுது- 1டீஸ்பூன், மிளகு -10 (காரத்துக்கேற்ப). வரமிளகாய் -2, கறிவேப்பிலை, கொத்துமல்லி- தலா ஒரு கைப்பிடி, உப்பு நல்லெண்ணெய்- தேவைக்கு.

வாணலியில் எண்ணெய் விட்டு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்துமல்லி வதக்கி அனைத்து பொருள் களையும் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொண்டு தேவையெனில் கடுகு சேர்த்து தாளித்து இறக்க லாம். இவைதவிர பிரண்டையை வருடம் முழுவதும் பயன்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்.

பிரண்டையை எல்லா காலங்களிலும் பயன்படுத்த பிரண்டை வற்றல் ஏற்றது. இளம்பிரண்டையை துண்டுக ளாக்கிய நன்றாக புளித்த மோரில் கைப்பிடியளவு உப்பு சேர்த்து வெயிலில் காயவைத்து மீண்டும் ஊறவைத்த மோர் பானையில் கலக்கி அடுத்த நாள் காயவைத்து உலர்த்தி மோர் தீரும் வரை ஊறவைத்து நன்றாக காய வைத்து எடுத்து வைத்தால் பிரண்டை வற்றல் தயார்.
பிரண்டை உப்பு
உடலுக்கு பல வகையில் நன்மை தரும் பிரண்டை உப்பை எளிதாக தயாரிக்கலாம். பிரண்டையை உலர்த்தி நன் றாக காய்ந்தது மண்சட்டியில் வைத்து தீயிட்டு சாம்பலாக்கவும். கிடைக்கும் சாம்பலை அளந்து ஒரு கிலோ சாம்பலுக்கு 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து கரைத்து மண்சட்டி அல்லது பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 10 நாள் வரை வெயிலில் வைக்கவேண்டும்.

நீர் வற்றி வற்றி அந்த சாம்பல் உப்பாக படிந்து பாத்திரத்தின் அடியில் படர்ந்திருக்கும். இதைத்தான் பிரண்டை உப்பு என்று சொல்கிறோம். இந்தபிரண்டை உப்பு உடலில் தேவையற்று இருக்கும் ஊளைச்சதையைக் குறைத்து வெளியேற்றும். காலை மாலை பாலில் கலந்துசாப்பிட்டுவந்தால் நல்ல பலன் தெரியும்.
ஆண்கள் பாலில்பிரண்டை உப்பு கலந்து குடித்துவந்தால் ஆண்மை பெருக்கும். பிரண்டை நினைவுத்திறனை யும் உடலுக்கு புத்துணர்ச்சியும் உடல் சுறுசுறுப்பையும் வளமாக்குகிறது என்பது கூடுதல் சிறப்பு.

பிரண்டையின் பலன்கள் இவ்வளவு இருந்தாலும் பிரண்டை வாங்கி சுத்தம்செய்து என்று சலித்துகொள்பவர்கள் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் பிரண்டை பொடியை வாங்கி பயன்படுத்தலாம். மேலும் பிரண்டை உப் பும் கிடைக்கிறது. தரமான கடைகளில் வாங்கி பயன்படுத்துங்கள்.

ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் பிரண்டையில் பிரண்டைத்துவையல்,பிரண்டை இலைத்துவையல் வீட்டில் செய்து சாப்பிட்டால் பலனும் கண்கூடாக காணலாம். இனி பிரண்டையை வாங்குவதோடு வீட்டிலும் வைத்திருங்கள். ஆரோக்கியமான வீட்டுக்கு அடித்தளம் பிரண்டை போன்ற மூலிகைதான்.