Tuesday, March 26, 2019

ஆன்மீகப் பயிற்சியின் பயன்கள் :

ஆன்மீகப் பயிற்சியின் பயன்கள் :

நாமே முதலில் ஆன்மீகப் பயிற்சியில் விளையும் நன்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு ஆன்மீகப் பயிற்சியின் நல்விளைவுகளை விளக்கிக் கூறுகிறேன்.

1] முறையான உடற்பயிற்சியினால் நோய் வராமல் காத்துக் கொள்ளுகிறோம். உள்ள நோய்களும் காலத்தால் குணமாகின்றன. குறைந்த பட்சம் நோயின் கொடுமை குறைகிறது.

2] மனிதனின் உடலை விட முக்கியமான பொருள் உயிர். அது விஞ்ஞானக் கருவிக்கும் எட்டாதது. அவ்வளவு நுண்மையானது. அந்த உயிரை உணர்வாகப் பெறுகிறோம் தீட்சையின் முதல் நாளன்றே உயிர்மேல் மனம் வைத்து ஒன்றி ஒன்றிப் பழகி வர அறிவு நுண்மையும் கூர்மையும் பெறுகிறது. பயிற்சியால் அறிவு பெரும் உறுதி, நுட்பம், ஆற்றல் இவை வாழ்க்கைத் துறைகள் அனைத்திலும் வெற்றியடையச் செய்கிறது.

3] அகத்தாய்வுப் பயிற்சியினால் எண்ணத்தின் தன்மையும் தன்முனைப்பால் அறிவு திசை மாறி பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை ஆகிய ஆறு குணங்களாக அவ்வப்போது மாறுவதும் அந்த உணர்ச்சி வயப்பட்ட குணங்களின் வழியே செயல்புரிய, அவற்றால் தனக்கும் பிறர்க்கும் ஏற்படும் தீய விளைவுகளைக் கண்டுபிடிக்கவும் முடிகிறது. அடுத்துப் பயிலும் ஆசை சீரமைப்பு, சினம் தவிர்த்தல், கவலையொழித்தல் ஆகிய பயிற்சிகள் முறையாகப் பழகும்போது மனிதன் மனிதத் தன்மையோடு அமைதியும் இன்பமும் காத்து வாழ முடிகிறது.
- வேதாத்திரி மகரிஷி

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன் !

Maharishi thoughts (MARCH 26)

Maharishi thoughts (MARCH 26)

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!

வாழ்க்கை மலர்கள்....

மார்ச்,26....
.

ஆஸ்தீகமும் நாஸ்தீகமும் :
.

இயற்கையமைப்பை அதன் ஆதிநிலையிலிருந்து அறிவின் எல்லை வரை அறிந்து கொள்வதே தத்துவ விளக்கம் எனப்படும். தத்துவ விளக்கம் பெற்றவன் இயற்கையே எல்லாமாகவும் தானுமாகவும் இருக்கும் உண்மையை உணர்ந்து கொள்கின்றான். அவன் வேறு இயற்கை வேறு என்றில்லாத பேதமற்ற நிலையை உணர்ந்து கொண்டால் அவனுக்கு அப்பாலும் அவனுக்கு அந்நியமாகவும் ஏதுமில்லை என்று தெளிவடைகின்றான். இந்தத் தெளிவே 'நாஸ்தீகம்' எனப்படும்.
.

இந்த நிலையை ஆறறிவு பெற்ற மனித இனத்தில் வயது வந்தோர் எல்லோரும் அறிந்தால் அல்லாது மனித இன வாழ்வின் அமைதியும் இன்பமும் நிலைப்பதற்கில்லை. எனவே பல்வேறு அறிவு நிலைகளில் வாழும் உலக மக்கள் இயற்கையின் பூரணநிலையை அறிய வேண்டிய அவசியத்தையும் வழிகளையும் சொல்லுகிறான். அறிந்து கொள்ள முடியாத அறிவின் நிலையில் உள்ளவர்களுக்கு ஆசையும் அச்சமும் ஊட்டும் பல கற்பனைகளின் மூலம் அந்நிலையை நாட வழி செய்கின்றான். இவ்விதம் மக்கள் நம்பிக்கை மீது நல்வாழ்வு காண வகுக்கும் முறைகளே பக்திமார்க்கம் அல்லது ஆஸ்திகம் ஆகும்.
.

ஆகவே பூரண விளக்கம் பெற்றவனே நாஸ்தீகன். அவன் பரப்புவதே ஆஸ்திகம் ஆகும். நாஸ்திகம் என்பது உண்மையை உணர்ந்த நிலை. ஆஸ்திகம் என்பது உண்மையை உணர மனிதனை நம்பிக்கை மூலம் பக்குவப்படுத்தும் வழி. நாஸ்திகம் பரப்பக் கூடிதல்ல. உணரக்கூடியது. ஆசஸ்தீகமே பரப்பக் கூடியது. அதன் முடிவில் காயே பழமாவது போல் அதுவே நாஸ்தீகமாக மாறிவிடும். அறிவின் மயக்கத்தாலும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் பேசப்படும் ஆஸ்தீகமும் நாஸ்தீகமும் பயனற்றது மட்டுமல்ல, பலவிதமான தீமைகளை விளைவிப்பனவாகும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"மனிதனே நீயார்? சொல்!
மனமென்பதெது ? கூறு!
மயங்கினாயேல் நீ மதிக்கும்
மற்றவெலாம் சரியாகா!"
.

ஞானம் தேடும் பக்தர்கள்:

"தேடுகின்ற பொருள் என்ன, ஏன் நமக்கு,
தெரிந்தவர் யார், கிடைக்குமிடம்எது, ஈதெல்லாம்
நாடுகின்ற வழக்கம் சிலபேரே கொள்வார்
ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து
ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்;
ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்
வாடுகின்றார்; உளம்நொந்து இருளைத்தேட
விளக்கெடுத்து போவதைப்போல முரண்பாடன்றோ".
.

உண்மை நிலை:

"எல்லையற்ற பரவெளியாய்
எண்ணத்தை விரித்தகன்று
இந்நிலையில் நிற்க நிற்க
இல்லையென்று புலன் உணரும்
இருப்பு நிலையறி வெய்தும்
இது உண்மை உண்மை."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

Sunday, March 24, 2019

மனோகர்   பாரிக்கர்,

*மனோகர்   பாரிக்கர், முதலமைச்சர் (கோவா)* .மரண படுக்கையில் அவரது பேட்டி

என் வாழ்க்கை எனக்கு அளவிட முடியாத அரசியல் மரியாதையை கொடுத்துள்ளது..என் பெயருடன் இணைந்த அடையாளமாகி போனது.

கூர்ந்து யோசித்தால் , நான் செய்யும் பணியை விட வேறு மகிழ்ச்சியான தருணங்களை , நான் அனுபவிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

இன்று உடல் நலிவுற்று , படுக்கையில் நான் வீழ்ந்த நிலையில் , என் இதுவரை வாழ்ந்த வாழ்வினை *சுயபரிசோதனை* செய்து பார்க்கிறேன்.

🔥புகழ், பணம்(சொத்து),கண்டிப்பு இவையே, வாழ்வில்  நாம்  அடைய வேண்டிய மைல்கல் என்று நினைத்தேன், ஆனால் மரணத்தின் வாயிலில் நிற்கும் எனக்கு *இப்போ இதெல்லாம் அர்த்தமற்றதாக தெரிகிறது*

🔥மரணத்தை நான் நெருங்கும்  ஒவ்வொரு நொடியும், மருத்தவமனையில் என் படுக்கையை சுற்றி ஒளி+ஒலியிடும் உயிர் காக்கும் கருவிகள் நான் மரணத்தின் அருகாமையில் இருப்பதை உணர்த்துகின்றன.

இந்த சிக்கலான தருணத்தில் நான் உணர்ந்தது என்னவென்றால் *வாழ்க்கையில் , பணத்தையும் புகழையும் குவிப்பதை  விட இன்னும் அடைய வேண்டியது நிறைய உண்டு*  *சமூக சேவையும், நமக்கு பிடித்தமான நபர்களோடு சரியான உறவுமுறை பேணுதலும் மிக அவசியம்.*

அரசியலில் எவ்வளவோ வெற்றி பெற்று இருந்தாலும், *போகும் போது எதையும் எடுத்து போக போவதில்லை* என்பதை நன்கு உணர்கிறேன்.

*மரணப்படுக்கை மிகவும் தனித்துவம் வாய்ந்தது காரணம் அந்த படுக்கையை பிறரோடு பகிர முடியாது.*

*உங்கள் ஏவலுக்கு கட்டுப்பட, எத்தனை வேலைகாரர்கள், டிரைவர்கள், பணியாளர்கள் என்று  இருந்தாலும் உங்கள் வியாதியை யாரோடும் பகிர முடியாது.*

*எதை தொலைத்தாலும் தேடி கண்டுபிடித்துவிடலாம், ஆனால் தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்க முடியாது. எனவே அர்த்தமுள்ள வாழ்வை வாழுங்கள்.*

*வாழ்நாள் முழுவதையும், வெற்றியை துரத்துவதிலேயே கழிக்காதீர்கள். வாழ்க்கை என்னும்  நாடகத்தில் , மரணம் என்னும் climaxகாட்சி வந்தே தீரும்*

எனவே நண்பர்களே, *உங்கள் மீது அக்கறை செலுத்துங்கள்* *உங்க பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவு செய்ய பழகி கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவரிடம் பாசத்தை பொழிய பழகி கொள்ளுங்கள்.*

*பிறக்கும் போது நாம் அழுகிறோம், இறக்கும் போது நம்மை சுற்றியுள்ளவர்கள் அழுவார்கள்.... எனவே இந்த இரண்டு அழுகைக்கும் உட்பட்ட காலத்தை , மரணத்தை நாம் தொடும் முன்பு மகிழ்ச்சியாகவும், அர்த்தமுள்ளதாகவும் வாழ்வோம்.*
                                -மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா).

(தமிழாக்கம் :
திரு,ராணா மோகன பிரகாஷ். 
திருப்பூர்....

*வாழ்வின் இறுதி காலத்தில் மிகப்பெரிய உண்மையை அற்புதமாக வெளிப்படுத்திய திரு.மனோகர் பாரிக்கர் அவர்களுக்கு புகழ் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறோம்!!*

🌹🙏🏼😔

Before gold purchase

ட்ராபிக் ராமசாமி எதற்கெடுத்தாலும் வழக்கு போடுகிறார் இதற்கெல்லாம் வழக்கு போடமாட்டாரா
ஆண்டுக்கு ஒரு கடை எப்படி?*
தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?*
_____________________

💫 ஒரு பவுன் தங்கசெயினுக்கு
1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!

💫 இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!

💫 ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...!

💫 இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்...!

💫 ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் ! ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்...!

💫 ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!

💫 இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்...!
1 கிராம் தங்கம் ரூ. 2922/-
8 கிராம் தங்கம் ரூ. 23,376/-
1 கிராம்  செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-
6.5 கிராம் தங்கம் - 18,993/-

6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அடக்க விலை -18993+7=19000/-

1 பவுனுக்கு தங்கத்தில் லாபம் - 23376-19000= 4376/--

சேதாரம் 1.5 கிராம் = 4383/-

1 பவுனுக்கு மொத்த லாபம்  4376+4383=8759                

💫 என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...!

💫 நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே ! உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி ஷேர் செய்யவும்.
எதுவும் மக்களால் முடியும்...!

Friday, March 15, 2019

Examination motivation

கோயம்புத்தூர் பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று,,,

*அன்பார்ந்த பெற்றோர்களே!*

*உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.*

*பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.*

*எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.*

*பரிச்சையில் வெற்றிபெறாத மாணவர்களில்..*
*ஒரு கலைஞன் இருப்பான்*

*அவனுக்கு கணிதம் தேவைப்படாது.* *அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்* *அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.*

*ஒரு இசைஞானி இருப்பான்* *அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.*

*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்* *அவனது உடல் நலனே முக்கியமன்றி* *பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.*

*பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..*

*எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன என்று*

*தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.*

*அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.*

*நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.*

*உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.*

*என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.*

*வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.*

*மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.*

*உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.*

படித்ததில் பிடித்தது  🍀

MADURAI.

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவை:

1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',

2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',

3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',

4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',

5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .

மதுரையில் பிறந்தாலும்
மதுரையில் வாழ்ந்தாலும்
மதுரையில் இறந்தாலும்
மதுரையில் வழிபட்டாலும்
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்

இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.

சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி

பொள்ளாச்சி குற்றக் காரணங்கள் !*

*பொள்ளாச்சி குற்றக் காரணங்கள் !*
-------------------------------------------------------------------

*குற்றக் காரணத்தின் மூலத்தை தேடிப்பார்த்ததில். காலச்சக்கரம் சுழன்று நம்மை பல நூற்றாண்டிற்கு பின் அழைத்துச் செல்கிறது.*

*ஒரு மகாபாதகப் பொய்யால் விளைந்த குற்றங்கள் தான் இவைகள்.*

*பொய்யை தெரிந்துகொள்வதற்கு முன் நம் நாட்டினுடைய உண்மையான பலம் என்ன என்பதை இப்பொழுது பார்ப்போம் வாருங்கள்.*

*பாட்டன், முப்பாட்டன், சின்ன பாட்டன், பெரிய பாட்டன், சின்ன அப்புச்சி, பெரிய அப்புச்சி, சின்ன அம்மிச்சி, பெரிய அம்மிச்சி, சின்ன அப்பாரு, பெரிய அப்பாரு, சின்ன அப்பத்தா, பெரிய அப்பத்தா, எள்ளு தாத்தா, எள்ளு பாட்டி, கொள்ளு தாத்தா, கொள்ளுப் பாட்டி, தாத்தா, பாட்டி, எள்ளு பேரன், எள்ளு பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி, பேரன், பேத்தி, அம்மா, அப்பா, கணவன், மனைவி, அண்ணன், அண்ணி, தம்பி, தங்கச்சி, அக்கா, தாய் மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமனார், மாமியார், மருமகன், மருமகள், ஆண் சம்மந்தி, பெண் சம்மந்தி, நங்கையா, நாத்தனார், கொளுந்தனார், கொளுந்தியா, மாமன், மச்சான், மாப்பிள்ளை, பங்காளி, மச்சினன், மச்சினிச்சி, மச்சாண்டார், சகலை.*

*என்னங்க பிரம்மித்து பார்க்கிறீர்கள் ? இவை எல்லாம் நம் சொந்த பந்தங்களின் உறவுமுறைப் பெயர்கள். இது போல் சொந்த பந்தங்களும், அவர்களை அழகாக பெயரிட்டு அழைப்பதும் உலகிலேயே எந்த இனத்திலும் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்களா ?*

*நம் சொந்தங்கள் தான் இந்நாட்டின் உண்மையான பலம். நம் சொந்தங்கள் தான் நம்முடைய உண்மையான பலம். இதை எல்லாம் வெள்ளைக்காரன் நன்கு அறிவான்.*

*அம்மா வாசல் கூட்டி கோலமிட, அப்பா மாடுகளை கவனிக்க, அக்கா தங்கைக்கு சடை பின்னி பூ வைக்க, பேரன் பேத்திக்கு தாத்தா பாடம் புகட்ட, அண்ணன் தம்பி விளையாட, தாய்மாமன் மாப்பிள்ளைகளை குளிப்பாட்ட, அத்தை குழந்தைகளை அலங்காரம் செய்து அழகு பார்க்க, பெரியவர்கள் சமையல் வேலை பார்க்க மற்றவர்கள் அனைவரும் உதவி செய்ய கூட்டுக்குடும்பமாக அனைவரும் தற்சார்பாய் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே உற்பத்தி செய்தும், தயாரித்தும் சொர்க்கபூமியில் ஆனந்தமாய் வாழ்ந்து வந்த அழகான காலம் அது.*

*இவர்கள் ஒற்றுமையாக இருந்தால் நாம் இங்கு நம்முடைய பொருட்களை எல்லாம் வியாபாரம் செய்ய முடியாது என்று நன்கு அறிந்த உலகவல்லாதிக்க தீய சக்தி தன் தந்திர வேலைகளை மிக அழகாக திட்டமிட்டு அரங்கேற்றத் தொடங்கியது.*

*என்ன தந்திரங்கள் ?*

*௧ - மருத்துவப் பொய்*
*௨ - சினிமா - காதல் திருமண ஊக்குவிப்பு*
*௩ - சீரியல் - பண்பாடு கலாச்சார சீரழிவு*

*முதலில் மருத்துவப்பொய்யை பார்ப்போம்.*

*பல நூற்றாண்டுகளுக்கு முன் வெள்ளைக்காரன் தன் சுயநலத்திற்காக கட்டவிழ்த்தப்பட்ட மகாபாதகப் பொய் இதோ*

*"சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாக பிறக்கும், பல்வேறு பரம்பரை நோய்கள் தாக்கும்" என்ற மிகப்பெரிய பொய் தான் அது.*

*ஏன் இப்படி சொன்னார்கள் ? தற்சார்பை உடைத்து சொந்த பந்தங்களை எல்லாம் தந்திரமாக  பிரித்துவிட்டால் அவன் இங்கு தாராளமாக கடை விரித்து உட்காரலாம்.*

*அது மட்டுமல்லாமல் சொந்தத்தை விட்டு கலப்பு திருமணம் செய்தால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டு, வீரியம் இல்லாத கலப்பு குழந்தை பிறக்கும் என்பதும் அவனுக்கு நன்றாகத்தெரியும். இதன் மூலம் இவன் மருத்துவ வியாபாரத்தையும் அமோகமாக செய்யலாம்.*

*ஆதலால் இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டு, அழகாய் நிம்மதியாய் வாழ்ந்து வந்த நம்முடைய உண்மையான பலமான சொந்த பந்தங்கள் அடங்கிய கூட்டுக்குடும்பங்களை பிரித்துவிட்டான். இந்த குள்ள நரி வேலை இந்த நொடி வரை சீரியல் என்னும் சீரழிவு மூலம் அனைவரது இல்லங்களில் அழகாக அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.*

*49 பரம்பரையின் ஜீன்கள் நம் உடலில் இருக்கும். இந்த ஜீன்கள் சொந்தத்தில் திருமணம் செய்யும் போது ஒத்துப்போகும். எந்த பாதிப்பும் நிகழாது. கலப்பு திருமணம் செய்யும் போது ஒத்துப்போகாமல் அதன் வேலையை காட்டத் தொடங்கும். இது குடும்பத்திற்குள் சின்ன சின்ன சண்டையாக தொடங்கி, குழந்தையின்மை என, பின் குடும்பமே நிர்மூலமாகும் அளவிற்கு செல்லும்.*

*போன தலைமுறை வரை அனைவரும் சொந்தத்திற்குள் தான் திருமணம் செய்தார்கள். வெளியில் திருமணம் செய்தால் அதை குல சாபமாக கருதினார்கள். ஊரைச் சுற்றி 5 கிலோ மீட்டருக்குள் தான் பெண் கொடுப்பார்கள்.*

*இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம் ? எனக்கு தெரிந்து சொந்தத்தில் திருமணம் செய்தவர்களின் குழந்தைகள் மூளை வளர்ச்சி இன்றியும், ஊனமாகவும் பிறந்திருக்கிறதே என்று ! இதற்கு காரணம் சொந்தத்தில் திருமணம் செய்தது அல்ல. அக்குழந்தைக்கு நீங்கள் போட்ட தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்தால் விளைந்த பாதகங்கள் தான் அவைகள்.*

*உங்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக சொந்தத்தில் திருமணமானவர்களின் குழந்தைகளை வேண்டும் என்றே திட்டமிட்டு வைத்தியம் என்ற பெயரில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். என்னங்க அதிர்ச்சியாய் உள்ளதா ? ஆம், மக்களை நம்ப வைக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் கொடூர பாவிகளே அவர்கள்.*

*௨ : சினிமா - சொந்தங்கள் பெயரைச் சொல்லி இதெல்லாம் டூப்பு நண்பன் தான் டாப்பு ! போன்ற பாடல்கள், சொந்தங்களை பிரிக்கும் காட்சிகளை திணித்து, காதலை ஊக்குவித்து, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி உள்ளார்கள்.*

*௩ : சீரியல் - சொல்லவே வேண்டாம், அத்தனை கழிசடைகளும் இதில் அடக்கம். சொந்தங்கள் கேடு செய்வது போல் தவறாக சித்தரித்து காட்டி சொந்த பந்தத்தில் பிளவை ஏற்படுத்தி உள்ளார்கள்.*

*குற்றக்காரணங்கள் என்று கூறி எதற்கு இதை எல்லாம் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா ? தொடர்பு உண்டு. இதோ*

*குற்றக் காரணங்கள் !*
-----------------------------------------

*1 - கூட்டுக்குடும்ப அழிப்பு*

*2 - தாமதமாகும் திருமணம்*

*3 - இணையத்தில் மிக எளிதாக கிடைக்கும் ஆபாச படங்கள்*

*4 - அசிங்கமான திரைப்படங்கள்*

*5 - அளவிற்கதிமான மது விற்பனை*

*6 - தவறான பெண் சுதந்திர தூண்டுதல்*

*7 - கண்மூடித்தனமாக காதலை ஆதரிக்கும் கூட்டும்*

*8 - அளவிற்கு அதிகமான சுதந்திரம்*

*9 - மேற்கத்திய கலாச்சார தாக்கங்கள்*

*10 - பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்காத பெற்றோர்*

*11 - குடும்ப வாழ்க்கைமுறையை சிதைக்கும் பிரச்சாரங்கள்*

*12 - கேவலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்*

*13 - பலகீனமாகி வரும் ஆன்மீக ஈடுபாடு, குறையும் இறைநம்பிக்கை*

*14 - படித்து விட்டு வேலை கிடைக்காமல் சுற்றும் கூட்டம்*

*15 - பண்பாடு கலாச்சார சீரழிவு செயல்கள்*

*16 - Android Cell Phone*

*17 - Social Media கள்*

*இவை அனைத்தும் குற்றச்செயலுக்கு முக்கிய காரணங்கள். இதில் மிக மிக முக்கியமான காரணம் தாமதமாகும் திருமணம். இதை மட்டும் பார்ப்போம்.*

*தாமதமாகும் திருமணம் !*
-----------------------------------------------

*இயற்கை விதிப்படி எப்பொழுது ஒரு பெண் வயதிற்கு வருகிறாளோ, அப்பொழுதே அவள் திருமணத்திற்கு உடல் ரீதியாக தயாராகி விட்டாள் என்பது அர்த்தம்.*

*"காலத்தே பயிர் செய்" என்பது முன்னோர் வாக்கு. இது யாராவது காதில் ஒலித்ததா ? என்பது தெரியவில்லை ! காலதாமத திருமணம் உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். அதை எல்லாம் பின்னர் பார்ப்போம்.*

*அதற்கு முன், வெளிநாடான அமெரிக்காவில் சட்டப்பூர்வமான திருமண வயதை நீங்கள் அறிவீர்களா ? இதோ*

*Legal marital age in United States Of America*

*அதிகபட்சம் (Almost in all states)*

*ஆண் - 18*
*பெண் - 16*

*குறைந்தபட்சம் (In some states)*

*ஆண் - 14*
*பெண் - 12*

*என்னங்க வியப்பாய் உள்ளதா ? ஆம். இது அனைத்தும் அந்நாட்டில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட திருமண வயது.*

*ஆதாரம் இதோ*

https://en.m.wikipedia.org/wiki/Age_of_marriage_in_the_United_States

*ஆனால் நம் நாட்டில்*

*Legal Marital age in India*

*ஆண் - 21*
*பெண் - 18*

*இது இந்தியாவில் சட்டப்பூர்வமான திருமண வயது. குறைந்தபட்சம் இதையாவது கடைப்பிடிக்கிறீர்களா ? கிடையாது.*

*போன தலைமுறை பெற்றோர்களா நீங்கள் ?*

*உங்களிடம் ஒரு கேள்வி ?*

*நீங்கள் எந்த வயதில் திருமணம் செய்தீர்கள் ? ? ?*

*உங்கள் பிள்ளைகளுக்கு எந்த வயதில் திருமணம் செய்கிறீர்கள் ? ? ?*

*தமிழகத்தில் மட்டும் பல லட்சம் ஆண் மற்றும் பெண்கள் 30 வயதாகியும் இன்னமும் திருமணமாகாமல் உள்ளார்கள்.*

*வாருங்கள் அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.*

*திருமணம் தாமதமாக காரணங்கள் !*
--------------------------------------------------------------------

*1 - சொந்தத்தில் திருமணம் செய்தால் பாதிப்பு ஏற்படும் என்னும் மாபெரும் பொய்*

*2 - Maturity வந்த பின் திருமணம்*

*3 - படிப்பு முடிந்த பின் திருமணம்*

*4 - Settle ஆன பின் திருமணம்*

*5 - சம்பாதித்து கடன் அடைத்த பின் திருமணம்*

*6 - வீடு கட்டிய பின் திருமணம்*

*7 - தவறாக பார்க்கப்படும் ஜாதகப்பொருத்தம்*

*8 - அதிகரிக்கும் Broker கள்*

*9 - அளவிற்கு அதிகமான Option*

*10 - Government job உள்ள மாப்பிள்ளை*

*11 - Foreign மாப்பிள்ளை*

*12 - IT மாப்பிள்ளை*

*13 - சினிமா Hero போல் மாப்பிள்ளை சிவப்பாக இருக்க வேண்டும்*

*14 - சினிமா Heroine போல் பெண்*

*15 - உடன்பிறப்புகள் அல்லாத ஒரே பெண்*

*16 - பெண் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற தவறான தூண்டுதல்*

*17 - மாப்பிள்ளையை முடிவு செய்யும் இடத்தில் பெரியவர்களுக்கு பதில் பெண்கள்.*

*18 - அளவிற்கு அதிக பவுன் எதிர்பார்ப்பு.*

*19 - அதிகரிக்கும் திருமண தகவல் இணையதள நிறுவனம்*

*20 - குடும்ப வாழ்கைமுறையை சிதைக்கும் தவறான பிரச்சாரங்கள்*

*21 - அனைத்திலும் அளவிற்கு மீறிய பேராசை*

*22 - சொந்த வீடு வாகனம் உள்ள குடும்பம்*

*23 - ஏக்கர் கணக்கில் காடு உள்ள குடும்பம் வேண்டும் (ஆனால் மாப்பிள்ளை அதில் வேலை செய்யக்கூடாது, என்னக்கொடும டா)*

*24 - என் பெண் வேலைக்கு சென்று சம்பாதித்து கொடுக்கிறாள் என்று இன்னும் கொஞ்ச காலம் ஊரில் பெருமை பேசி காலத்தை தள்ளும் பெற்றோர்கள்.*

*25 - பெற்றோர்களின் சுயநலம், பொறுப்பற்ற தன்மை மற்றும் வெட்டி கௌரவம்.*

*26 - மாப்பிள்ளை லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும்.*

*இது போன்ற எண்ணிலடங்கா காரணங்களே திருமணம் காலதாமதமாக முக்கிய காரணமாக உள்ளது.*

*திருமணத்திற்கு முன் Settle ஆக வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. திருமணம் முடித்து கூட செட்டில் ஆகலாம். ஆனால் காலம் தாண்டினால் குழந்தைச்செல்வம் கோடி ரூபாய் கொடுத்து தவமாய் தவமிருந்தாலும் கிடைக்காது என்பது சத்தியம்.*

*ஜாதகத்தில் 10 பொருத்தம் இருக்க வேண்டி அவசியமே இல்லை. 5 ற்கும் கீழ் குறைவான பொருத்தம் இருந்தாலும் கூட கிரக ரீதியாக சரியான அமைப்பு இருந்தால் திருமணம் செய்யலாம் என்பது ஜோதிட சாஸ்திரம் கூறும் உண்மை. ஆனால் பல ஜோதிடர்களுக்கு இது தெரிவதில்லை. பலர் பொருத்தம் மட்டும் பார்த்து விட்டு Reject செய்து விடுகிறார்கள். சொந்தத்தில் பெரியவர்கள் பார்த்து திருமணம் முடிக்கலாம் என்று சொன்னால் ஜாதகமே பார்க்கத்தேவை இல்லை.*

*அக்காலத்தில் வாழா வெட்டியாக வந்தால் அடுத்த திருமணம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது, அவனோடு தான் வாழ்ந்தாக வேண்டும் ஆனால் இப்பொழுது அடுத்த முகூர்த்தத்திலேயே இரண்டாவது திருமணம் என்ற கண்மூடித்தனமான சுதந்திரம் வழங்கும் பெற்றோர்கள்.*

*Broker மற்றும் இணைய திருமண தகவல் நிறுவனங்கள் பெருகிவிட்டதால் அளவிற்கு அதிகமான Option ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கிடைக்கிறது. இது சரி இல்லை இது சரி இல்லை என்றே பல வருடங்கள் ஓடி விடுகிறது.*

*உங்களுக்கு ஒன்று தெரியுமா ? வடகொரியா, தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில் Google Search engine ஏ கிடையாது. அவர்கள் நாட்டிற்கு அவர்களாகவே Search engine வைத்திருக்கிறார்கள். அதில் எந்த தவறான காட்சிகளும் வராது. ஆனால் இங்கோ சும்மா Cell Phone கையில் வைத்திருந்தாலே, அசிங்கமான படங்கள் அவ்வப்போது கண் முன்னே வந்து செல்கிறது.*

*Government job, It, Foreign மாப்பிள்ளைகளுக்கு உள்ள மௌசு, விவசாயி மாப்பிள்ளைக்கோ, சொந்த தொழில் செய்யும் மாப்பிள்ளைக்கோ கிடைப்பதில்லை.*

*போன்ற பல்வேறு எதிர்ப்பார்ப்புகளும், அளவிற்கு மீறிய பேராசைகளுமே ஆண், பெண் திருமண தாமதத்திற்கு காரணங்கள்.*

*சரி திருமணம் காலதாமதமாவதற்கும் குற்றச்செயலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை கேட்கிறீர்களா ?*

*இதோ*

*காலதாமத திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் !*
--------------------------------------------------------------------

*1 - இத்தனை சுதந்திரம் மற்றும் அனைத்து வசதி வாய்ப்புகளும் கைக்குள் அடங்கி இருந்து, பண்பாடு கலாச்சாரம் சீரழிவு ஏற்பட்டுள்ள இச்சமூகத்தில் வாழும் ஒரு ஆணோ, பெண்ணோ Harmone களை கட்டுப்படுத்த முடியாமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு குற்றச்செயல்களுக்கு தள்ளப்படுகிறார்கள். காலா காலத்தில் நடக்க வேண்டிய திருமணத்தை நீங்கள் நடத்தியிருந்தால் இது அனைத்தும் தடுக்கப்பட்டிருக்கும்.*

*2 - ஆண்களுக்கு கால தாமத திருமணத்தால் தவறான செயல்களில் ஈடுபட்டு ஆண் மலட்டுத் தன்மை ஏற்படும்.*

*3 - பெண்களுக்கு கால தாமத திருமணத்தால் Harmone குறைபாடு ஏற்பட்டு பெண் மலட்டுத் தன்மை ஏற்படும்.*

*4 - இருவருக்கும் கால தாமத திருமணத்தால் குழந்தை பிறப்பதே குதிரைக்கொம்பாகிவிடும். குழந்தையின்மை ஏற்பட்டு Fertility வாசலில் தவம் கிடக்க வேண்டிய நிலை ஏற்படும்.*

*5 - ஆண், பெண் இருவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு உடல் ரீதியான பாதிப்புகளாக மாறும்.*

*இந்த இளைய தலைமுறை என்ன பாவம் செய்ததோ ? இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.*

*இவை அனைத்திற்கும் காரணம் உலகவல்லாதிக்க தீயசக்தி என்பதை நீங்கள் அறிவீர்களா ?*

*திருமண வயதை அதிகமாக தீர்மானித்ததும் அவனே !*

*படித்து வேலைக்கு சென்று சம்பாதித்து Settle ஆன பிறகு திருமணம் என்ற எண்ணத்தை விதைத்ததும் அவனே !*

*சினிமா சீரியல் மூலம் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தியதும் அவனே !*

*அளவிற்கு அதிக தாராள மது பானங்களை விநியோகம் செய்வதும் அவனே !*

*ஆபாச படங்களை இணையத்தில் தாராளமாக உலவ விடுவதும் அவனே !*

*Android Cell Phone, Face Book, Whats app, Musically போன்ற Social Media க்களுக்கு நம்மை அடிமையாக்கியதும் அவனே !*

*இதற்கு எல்லாம் பலிகாடானது நம் ஒட்டுமொத்த சமூகம்.*

*தமிழனை முட்டாளாக்கிய வெள்ளைக்காரன். சொந்தத்திற்குள் திருமணம் செய்வது தான் நல்லது என்பதை எளிமையாக அழகாக விளக்கும் சித்த மருத்துவர் பேசிய காணொளியின் link இதோ*

https://m.facebook.com/story.php?story_fbid=1902251083191760&id=100002206598579

*சொந்த மகரந்த சேர்க்கை நடைபெறும் நாட்டு விதைகள் தான் வீரியமாக முளைக்கும். இதில் சத்தும் சுவையும் அதிகம். இது தான் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.*

*செயற்கையாக அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்ற Hybrid விதைகள், மீண்டும் முளைக்காது. இதில் சத்தும் சுவையும் மிகக்குறைவு. விளைப்பொருட்களும் உடல் நலனிற்கு உகந்ததல்ல என்பதும் உங்கள் அனைவருக்கும் தெரியும்.*

*சொந்த இனத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட நாட்டு மாடுகள் தான் வீரியமாக இருக்கும். கலப்பின மாட்டை 50 மீட்டர் ஓடவிட்டு பாருங்கள் செத்துவிடும் என்கிறார். நாட்டு மாடு எவ்வளவு தூரம் ஓடினாலும் திமிர் கொண்டு நிற்கும். இந்த வெயில் காலத்தில் கலப்பின மாடுகள் நிழலில் இருந்தாலும் கூட இளப்பு ஏற்பட்டுகிறது. நாட்டு மாடுகள் உச்சி வெயிலிலும் கம்பீரமாக அசராமல் நிற்கிறது. நாட்டு மாட்டின் பெருமை அனைத்தும் ஐல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் தெரியும்.*

*இதேப்போல் நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் கோழி க்கும் உள்ள வேறுபாடு உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.*

*அனைத்தும் தெரிந்த நீங்கள், இயற்கையாகவே மனிதனுக்கும் இனம் உள்ளது என்பதை எப்பொழுதாவது எண்ணிப்பார்த்துள்ளீர்களா ?*

*செடிக்கு இனம் உள்ளது !*

*மாட்டிற்கு இனம் உள்ளது !*

*கோழிக்கு இனம் உள்ளது !*

*என்பதெல்லாம் உண்மை என்றால் !*

*மனிதனுக்கும் இனம் உள்ளது என்பதும் உலகில் யாராலும் மறுக்க முடியாத உண்மை.*

*எப்படி சொந்த மகரந்த சேர்க்கையில் உருவான நாட்டு விதை வீரியமிக்க நல்ல விதையோ !*

*எப்படி சொந்த இனத்தில் இனப்பெருக்கம் நடைபெற்று உருவாகும் நாட்டு மாடு வீரியமிக்க நல்ல மாடோ !*

*எப்படி சொந்த இனத்தில் இனப்பெருக்கம் நடைபெற்று உருவாகும் நாட்டு கோழி நல்லதோ !*

*அதேப்போல் தான் சொந்தத்திற்குள் திருமணம் செய்து பிறக்கும் குழந்தை வீரியமான, நோய்எதிர்ப்பு சக்தி மிக்க, அனைத்து பரம்பரை திறமைகளும் தன்னகத்தே ஜீன்களில் கொண்ட, புஜபல பராக்கிரம தெய்வீக குழந்தை பிறக்கும் என்பது சத்தியம்.*

*காய்கனி மட்டும் நாட்டு ரகம் வேண்டும் !*

*பழங்கள் மட்டும் நாட்டு ரகம் வேண்டும் !*

*மாடுகளல் மட்டும் நாட்டு மாடு வேண்டும் !*

*பசும்பால் மட்டும் நாட்டுப்பசும் பால் வேண்டும் !*

*கோழி மட்டும் நாட்டுக்கோழி வேண்டும் !*

*ஆனால் திருமணத்திற்கு மட்டும் சொந்தத்தில் பெண்ணோ, ஆணோ வேண்டாமோ ?*

*வெள்ளைக்காரன் பைத்தியக்காரன் அல்ல, நம்மை தான் அவன் பைத்தியக்காரன் ஆக்கி உள்ளான்.*

*சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த ராஜராஜ சோழன் தான் வானுயர தஞ்சை பெரிய கோவிலை கட்டி உள்ளார் !*

*சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த இரண்டாவது சூரிய வர்மன் தான் உலகிலேயே பெரிய கோவிலான கம்போடியா கோவிலை கட்டி உள்ளார் !*

*சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த கரிகால சோழன் தான் கல்லணையைக்கட்டி உள்ளார் !*

*சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த நம் முன்னோர்கள் தான் ஆயிரம் மைல் கடலில் பிரம்மாண்ட நாவாயை செலுத்தி வியாபாரம் செய்துள்ளார்கள்.*

*அவ்வளவு ஏன் சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த உங்கள் அப்பாவால் தான் இன்று நீங்கள் உயிரோடு இக்கட்டுரை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.*

*வெள்ளைக்காரன் சொன்னது உண்மையாக இருந்திருந்தால் இன்று நோய் தாக்கி அனைவரும் இறந்திருப்பார்கள். மனித இனமே இருந்திருக்காது.*

*உண்மையில் அறிவியல் ரீதியாக அனைத்து உயிர்களும் அந்த அந்த இனத்தில் இனப்பெருக்கம் செய்வது தான் நல்லது. அப்பொழுது தான் வீரியமான தலைமுறை உருவாகும்.*

*எனவே இது போல் பாலியல் குற்றங்களுக்கு*

*தன் பிள்ளைகளுக்கு தாமதமாக திருமணம் முடிக்கும் பெற்றோர்களும் ஒரு காரணம் !*

*ஆபாசப் படங்கள் எளிமையாக இணையத்தில் உலா வந்தும் அதை தடுக்க சொல்லி அரசிற்கு எதையும் வழியுருத்தாத பெரியவர்களும் ஒரு காரணம் !*

*மக்களை தவறாக வழிநடத்தும் ஆங்கில மருத்துவர்களும் ஒரு காரணம் !*

*காக்க வேண்டிய மக்களை காக்காமல், உத்தரவுகளுக்கு பணிந்து வேலை செய்யும் காவல்துறையும் ஒரு காரணம் !*

*காவல்துறை யாரையும் சாராமல், நம் கருப்பு சாமி போல் மண்ணை சார்ந்து தனித்து இயங்கினால், அவர்களுக்கும் வேலை செய்வதில் ஒரு மன திருப்தி ஏற்படும். மனநிறைவுடன் வேலை செய்வார்கள்.*

*ஆபாச இணையதளங்களை அனுமதித்து எதையும் கண்டும் காணாமல் இருக்கும் இந்நாட்டு அரசும் ஒரு காரணம் !*

*மது விற்பனையை தாராளமயமாக்கிய மாநில அரசும் ஒரு காரணம் !*

*இது போல், நடந்த குற்றங்கள் அனைத்திற்கும் இந்த ஒட்டு மொத்த சமூகமும் காரணமாய் இருக்கிறது.*

*குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.*

*கொலை செய்தவனை விட கொலை செய்யத்தூண்டியவனுக்கே அதிக தண்டனை என்பார்கள்.*

*இவர்களை தவறு செய்ய தூண்டிய இச்சமூகத்திற்கு என்ன தண்டனை ? கொடுக்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் !*

*இக்கட்டுரை படிக்கும் நீங்கள் இன்னும் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்கவில்லையா ? உடனே அத்தை பையன், மாமன் பெண்ணை திருமணம் முடித்து வையுங்கள். இவர்கள் இல்லாவிட்டால் சொந்தத்தில் திருமணம் முடித்து வையுங்கள்.*

*உலகில் இவர்களைவிட உங்களுக்கு சிறந்த மருமகளோ ! மருமகனோ ! கிடைக்க வாய்ப்பில்லை !*

*நம்முடைய உண்மையான பலமே*
*நம் சொந்தங்கள் தான்*

*வெளியிட்ட தேதி : 14.03.2019*

*கட்டுரை எண் : 53*

rrmathi.blogspot.com

*இதில் எனது அனைத்து கட்டுரைகளையும் நீங்கள் படிக்கலாம்.*

*நன்றி*

*இரா.மதிவாணன்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹