Friday, August 25, 2017

சில வித்தியாசமான கணக்குகள்....

கூட்டல்:
மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி
மனிதன்+கவலை = கண்ணீர்
மனிதன்+ஆனந்தம் = புன்னகை
மனிதன்+இயலாமை = கோபம்
மனிதன்+அன்பு = காதல்
மனிதன்+ஆசை=காமம்

கழித்தல்:

மனிதன் - தன்னம்பிக்கை= தோல்வி
மனிதன் - கவலை = உற்சாகம்
மனிதன் - ஆனந்தம் = சோம்பல்
மனிதன் - இயலாமை = முயற்சி
மனிதன் - அன்பு = குரோதம்
மனிதன் - ஆசை = அமைதி

பெருக்கல்:

மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை
மனிதன் × கவலை = தற்கொலை
மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி
மனிதன் × இயலாமை = அவதி
மனிதன் × அன்பு = மனிதாபிமானம்
மனிதன் × ஆசை = வக்கிரம்

நன்றி: கவிஞர் பா.விஜய் அவர்களின் வானவில் பூங்கா புத்தகம்.

RAJAJI JS 25-8-17

❤ ஒரு ஜென் கதை ❤ ❤டோஜன் என்பவர் புகழ் பெற்ற ஒரு ஜென் குரு. தனது போதனைகளின் வழியே பல முக்கியமான ஜென் சிந்தனைகளைப் பரப்பியவர். ஒருநாள் அவரைப் பார்ப்பதற்காக ஒரு மாணவர் வந்திருந்தார். ‘குருவே, எனக்கு ஒரு பெரிய குழப்பம்!’ என்றார். ‘என்னது...???’ ‘நான் பெரிய அரசு அதிகாரியாக வேண்டும் என்று என்னுடைய தந்தை விரும்புகிறார். ஆனால் என்னுடைய தாய் நான் ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எனக்கோ உங்களைப்போல் ஒரு துறவியாகவேண்டும் என்றுதான் ஆசை’ என்று அந்த மாணவன் சொன்னான். ‘இப்போது நான் என்ன செய்யவேண்டும்...??? நீங்களே சொல்லுங்கள்!’ டோஜன் மெல்லச் சிரித்தார். ‘பள்ளித் தேர்வுகளில் நீ எத்தனை மதிப்பெண்கள் எடுத்தாய் என்று உன்னுடைய தந்தை எப்படித் தெரிந்துகொள்வார்...???’ ‘அதற்கென்று ஒரு மதிப்பெண் அட்டை உண்டு’ என்றான் அந்த மாணவன். ‘ஒவ்வொரு தேர்வும் முடிந்த பிறகு அந்த அட்டையில் என்னுடைய மதிப்பெண்களை நிரப்பித் தருவார்கள். அதை நான் என் தந்தையிடம் காண்பித்துக் கையெழுத்து வாங்கிவரவேண்டும்!’ ’நல்லது. அந்த அட்டையில் உன்னுடைய தந்தையின் கையொப்பத்தை நீயே போட்டுவிடுவாயா...???’ அந்த மாணவன் முகத்தில் அதிர்ச்சி. ‘குருவே, ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்....??? என் தந்தையுடைய கையெழுத்தை நான் எப்படிப் போடமுடியும்....??? அது அவருடைய தனித்துவமான அடையாளமாயிற்றே.....!!!’ ‘உண்மைதான். அடுத்தவர்களுடைய கையெழுத்தைப் போடுவதற்கு விரும்பாத நீ, அவர்கள் தங்களுடைய சிந்தனைகளை உன்மீது திணிக்கும்போது ஏன் அதை ஏற்றுக்கொள்கிறாய்.....??? உன்னுடைய தனித்துவத்தை நீ ஏன் காட்டுவதில்லை....???’ என்றார் டோஜன். ‘நீ அடுத்தவர்களாகமுடியாது. அடுத்தவர்கள் நீயாகமுடியாது. இந்த ஒரு விஷயத்தை என்றைக்கும் மறந்துவிடாதே. அது உன்னை வழிநடத்தும்" ❤

❤ ஒரு ஜென் கதை ❤

❤டோஜன் என்பவர் புகழ் பெற்ற ஒரு ஜென் குரு.

தனது போதனைகளின் வழியே பல முக்கியமான ஜென் சிந்தனைகளைப் பரப்பியவர்.

ஒருநாள் அவரைப் பார்ப்பதற்காக ஒரு மாணவர் வந்திருந்தார்.

‘குருவே, எனக்கு ஒரு பெரிய குழப்பம்!’ என்றார்.

‘என்னது...???’

‘நான் பெரிய அரசு அதிகாரியாக வேண்டும் என்று என்னுடைய தந்தை விரும்புகிறார்.

ஆனால் என்னுடைய தாய் நான் ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

எனக்கோ உங்களைப்போல் ஒரு துறவியாகவேண்டும் என்றுதான் ஆசை’ என்று அந்த மாணவன் சொன்னான்.

‘இப்போது நான் என்ன செய்யவேண்டும்...??? நீங்களே சொல்லுங்கள்!’

டோஜன் மெல்லச் சிரித்தார்.

‘பள்ளித் தேர்வுகளில் நீ எத்தனை மதிப்பெண்கள் எடுத்தாய் என்று உன்னுடைய தந்தை எப்படித் தெரிந்துகொள்வார்...???’

‘அதற்கென்று ஒரு மதிப்பெண் அட்டை உண்டு’ என்றான் அந்த மாணவன்.

‘ஒவ்வொரு தேர்வும் முடிந்த பிறகு அந்த அட்டையில் என்னுடைய மதிப்பெண்களை நிரப்பித் தருவார்கள்.

அதை நான் என் தந்தையிடம் காண்பித்துக் கையெழுத்து வாங்கிவரவேண்டும்!’

’நல்லது. அந்த அட்டையில் உன்னுடைய தந்தையின் கையொப்பத்தை நீயே போட்டுவிடுவாயா...???’

அந்த மாணவன் முகத்தில் அதிர்ச்சி. ‘குருவே, ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்....???

என் தந்தையுடைய கையெழுத்தை நான் எப்படிப் போடமுடியும்....???

அது அவருடைய தனித்துவமான அடையாளமாயிற்றே.....!!!’

‘உண்மைதான். அடுத்தவர்களுடைய கையெழுத்தைப் போடுவதற்கு விரும்பாத நீ,

அவர்கள் தங்களுடைய சிந்தனைகளை உன்மீது திணிக்கும்போது ஏன் அதை ஏற்றுக்கொள்கிறாய்.....???

உன்னுடைய தனித்துவத்தை நீ ஏன் காட்டுவதில்லை....???’ என்றார் டோஜன்.

‘நீ அடுத்தவர்களாகமுடியாது.

அடுத்தவர்கள் நீயாகமுடியாது.

இந்த ஒரு விஷயத்தை என்றைக்கும் மறந்துவிடாதே.
RAJAJI JS {25-8-17}

Wednesday, August 23, 2017

வாழ்வின் அத்தனை ரகசியங்களும்

*#மூச்சைக் கவனி.....*
*#பேச்சை குறை.*
********************************************************
*#வாழ்வின் அத்தனை ரகசியங்களும் நமது மூச்சுக் காற்றில் அடங்கியுள்ளது.ஒரு மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விடுகிறான்.இந்த அளவு எவ்வளவுக்கு எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு மனிதனின் ஆயுள் கூடும்.ஆயுள் மட்டுமல்ல அறிவும் வளரும்.புத்தி தெளிவடையும். அதே சமயம் இந்த அளவு அதிகரிக்க அதிகரிக்க நமது ஆயுள் குறையும்.*

*#புத்தி பேதலிக்கும். நாம் கோபப்படும் போதும்,பரபரப்படையும் போதும் நமது இதயத்துடிப்பு அதிகரிக்கும்.மூச்சின் அளவும் அதிகரிக்கும்.அதனால் தான் கோபம்,பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறினார்கள்.அதற்காக தியானம்,பிராணயாமம் போன்ற பல்வேறு வழிமுறைகளை நமக்கு விட்டுச் சென்றார்கள். இதில் பிராணயாமம் என்ற மூச்சுப்பயிற்சியை முறையாகக் கற்றவர்களே செய்ய வேண்டும். பல எளிய முறை மூச்சுப்பயிற்சிகளும் உள்ளன.அவற்றைப் பின்பற்றினாலே நமக்கு பல நன்மைகள் விளையும். இதில் ஓஷோ கூறியுள்ள ஒரு தியானமுறையைப் பார்ப்போம்.*

*#சுவாசத்தைக் கவனித்தல்(தியானம்)*
*"எல்லா விதமான தியான முறைகளையும் உனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை.*
*எளிதானதாகவுகிடைக்கமலோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இது உலகம் முழுவதும் பரவட்டும்.*

*#சுவாசத்தைக் கவனித்தல் என  பொருள்   இது மிகவும் எளிய முறை.*

*#எப்போது - நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும்,ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில்..காலம் - 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.*

*#முதல் படி - உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா. வேறு எண்ணங்களை விட்டுவிடு.*

*#நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.*

*#நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும்,பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும்.இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.*

*#பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள். இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய்.தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.*

*#உன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யாருக்கும் நீ செய்வது என்னவென்று தெரியாது.*

*#அதை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.*

*#சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய். ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும். இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும். ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.*

*#ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய்.*

*#அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம். உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது, இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும். உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும்,ஓய்வானதாகவும் புத்துணர்வு தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.*
*ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது.*

*#காலையில் நீ விழித்தெழுந்த உடன் உனது சுவாசத்தை கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய். அது உனக்கு வியப்பளிக்கும்."*

*#எண்ணங்களைக் குறைத்தால் பேச்சுக் குறையும்.பேச்சைக் குறைத்தால் மூச்சு குறையும். மூச்சைக் குறைத்தால் சித்தம் தெளிவடையும்.சித்தம் தெளிவடைந்தால் மொத்தமும் கிடைக்கும்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்* 
  

RAJAJI JS  ,23.8.17

Tuesday, August 22, 2017

குண்டலினிசக்தியைப்பற்றி

குண்டலினிசக்தியைப்பற்றி அற்புதமான விளக்கம் கிடைத்தது.பதிவிட்டுள்ளேன்.

====>> குண்டலினி சக்தி நம்
முதுகுதண்டின் அடிப்பகுதியில்
குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று பார்த்தால் தனிமங்களே!! அத்தனிமத்தின் பெயர்
வெண்பாஸ்பரஸ்.
இந்த வெண்பாஸ்பரஸ்
காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை
கொண்டது. அதேபோல் நம் உடலில்
உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு
கீழேயும் காற்று செல்வதில்லை.
இங்கே ஒரு
சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை
வழியாக காற்றை மூலாதாரத்திற்கு
கொண்டு
செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு
வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல்
மேலே எழுகின்றது.
இதுவே யோகமுறையில்
குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம்
உடலின் வெப்பத்தை உண்மையில்
மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்த
வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே
எழுகின்றது.
அடுத்து அந்த அனல் மேலே எழும்பி
சுவாதிஷ்தானத்தை அடைகின்றது. அங்கே
உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மேலே
எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும்
வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்ப
டுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே
குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.
இதனால் அனல் மேலும் மேலே எழுந்து
மணிபூரகத்தை அடைகின்றது. அங்கே அது
வினைபுரியும் தனிமத்தின் பெயர்
ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை
குணமே வெடிப்பதாகும். எனவே
வெப்பநிலை
மேலும் அதிகரித்து அனாகதத்தை
அடைகின்றது.
அனாகதத்தில் உள்ள
தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம்
சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த
ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன்
எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும்.
எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து
விசுத்தியை அடைகின்றது.
ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள
தனிமத்தின் பெயராகும். இங்கேயும்
வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும்
நிகழ்ந்து மேலேறுகின்றது.
அடுத்ததாக உள்ள
சக்கரத்தின் பெயர் ஆக்கினை. அங்கே சுத்த
நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே
எழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும்,அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது என்றும்,
ஒரு குருவின்
பெருமைகளை வெறும் வார்த்தைகளால்
விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த
பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள்
அனுபவத்திற்கு வரும்போது நன்கு
விளங்கும் என்றும் கூறப்படுகிறது.
"சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவே
தரம் பார்த் துன்னை
பரம் ஆக்கிடு வான்"
ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல்
திறந்தலே வெற்றிட பூஜ்ஜிய
பரமநிலையாகும். பிரமநிலைக்கு மணிபூரக
சக்கரம் விழிப்படைதலே காரணம்.
பக்தி
நிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும்,
முக்தி நிலைக்கு சகஸ்ராரம்
விழிப்படைதலும்,
யோக நிலைக்கு சுவாதிஷ்டானமும்,
ஞானத்தேடலுக்கு மூலாதாரம்
விழிப்படைதலும் காரணமாகும்.
நாதத்தின்
மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு
விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.
மேலும் நாம் தியானத்தில் அமரும் போது
குண்டலினியானது புருவமத்தி அல்லது
சகஸ்ராரத்திலும், தூங்கும் போது
விசுத்தியிலும் தங்கும். அந்த அமிர்தமும்
விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது
விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்).
குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு
முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய்
விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக
அடையாளமாக காண்பது விந்தின்
வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ள
மூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து
வெம்மையானது நெருப்பாறாக மாறி
வரிவரியாக தடம் இருக்கும்.
மேலும் உடலில்
நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக
புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ்
விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ "U"
நாமத்தடம் விழும். இத்தடமானது இப்பூமியில்
உடல் விடும் வரை இருக்கும். கை விரலால்
தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத்
தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக
நெருப்பாற்றின் தடத்தினையும் காணலாம்.
சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின்
வழியாக அமிர்தமானது பிறை வடிவ
நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன்
வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று
பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்தி
சென்று உறைவிடமாய் கொள்கிறது. மேலும்
பொன்னை உரசினாற் போல் மேனியுடைய
தேமலானது உடலில் அதிகம் காணலாம்.
அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக
உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய
உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும்
வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு
கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.
உடல் அடையாளமாக சாதாரணமாகவே
உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும் மற்றும்
புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,
மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது
உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில்
ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு
உருண்டையாக இருந்துகொண்டு எதையும்
நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு
உறுத்தல் ஏற்படும்.

குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள்
இருக்கும் ‘வெளிப்படாதசக்தி’. அதாவது அது
தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை,
அப்படியொரு சக்தி உங்களுக்குள் இருப்பதைக்
கூட நீங்கள் அறியமாட்டீர்கள்.
ஆம், ‘அசையாத
வரை’ இல்லாதது போல் இருக்கும், ஆனால்
அது எழுச்சியுற்று, வெளிப்பட
ஆரம்பித்துவிட்டாலோ, இத்தனை சக்தியும்
உங்களுக்குள் தான் இருந்ததா என்று நீங்கள்
மலைத்துப் போவீர்கள்.
இக்காரணத்தினால்தான்
இந்த சக்தியை ‘சுருண்டு கிடக்கும் பாம்பாக’
குறித்தார்கள். சுருண்டு கிடக்கும் பாம்பு
நகர
ஆரம்பிக்கும் வரை, யார் கண்ணிலும் படாது.
அதேபோல் தான் உங்களுள் அமிழ்ந்திருக்கும்
இந்த சக்தி எழுச்சியுற்று நகரும் வரை, அதை
நீங்கள் உணரமாட்டீர்கள்.இந்த சக்தி
எழுச்சியுறும் போது, நீங்கள் கற்பனையில்
கூட நினைத்திடாதஅதிசயங்கள் உங்களுக்குள்
நடக்கத் துவங்கும். முற்றிலும் புதுவிதமான,
அபரிமிதமான சக்தியோட்டம் உங்களுக்குள்
நிகழ, அனைத்துமே வேறு வகையில்
இயங்கும்.
குண்டலினியை எளிமையாக விளக்க உங்கள்
வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point)
இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை
உருவாக்குவதில்லை.
எங்கோ ஓரிடத்தில் ஒரு
பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம்
இருக்கிறது, அதுதான் மின்சாரத்தை
உருவாக்குகிறது,ஆனால் அது உங்களுக்கு
நேரடியாக மின்சாரத்தை வழங்க
முடியாது.இந்த பிளக் பாயிண்ட்தான்
உங்களுக்குமின்சாரத்தைக் கொடுக்க
முடியும்.
பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தை
நினைத்துக்கூட பார்ப்பதில்லை, இல்லையா?
அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று
தெரியாமல் இருந்தாலும், ஒரு
மின்சாதனத்தை
இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால்,
அந்த சாதனம் வேலை செய்யும் என்பது
மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக்
குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட்
போலத்தான், அதுவே ஒரு மின்நிலையம்
அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக்
பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக்
பாயிண்ட். இதை இப்படிப் பார்க்கலாம். உடலில்
இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள்
கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார
சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக
இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக்
பாயிண்டைப்
போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5
பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும்
இருக்கிறது.ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப்
(bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக்
பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப்
பற்றிய
அனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போது
உங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க
முடியும். இப்படி உங்களுடைய பிளக்
அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக
சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள்
இருபத்தி நான்கு மணி நேரமும்
பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரி
தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய
அவசியம் கிடையாது. எனவே, உங்களில், பிளக்
சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிரு
க்கும்போது, நீங்கள் எல்லையில்லாத
சக்தியின் மூலத்தோடு தொடர்பு
கொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி.
யோகா செய்வதன் அடிப்படையே
அவர்களுக்குள் ஒரு சமநிலையை
ஏற்படுத்துவதுதான். அந்த சமநிலை
வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக்
பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள்.
அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது,
எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து
தொடர்பில் இருப்பீர்கள்.
சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள்
‘ஆழ்ந்து உணரும்’ ஆற்றலும் கூடுகிறது.
யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின்
இந்த நுண்ணுணர்வை அதிகரிக்க
உருவாக்கப்பட்டவை தான். ஆன்மீக
செயல்முறை என்றாலே உங்களின் உணரும்
திறனை அதிகரிப்பதற்குத்தான்… ஏனெனில்
உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவை
எல்லாம் நீங்கள் உணர்வதை சார்ந்தே
இருக்கிறது.

*🙏🏻🙌🏻🌹வாழ்க வளமுடன்*🌹🙌🏻🙏🏻குண்டலினிசக்தியைப்பற்றி அற்புதமான விளக்கம் கிடைத்தது.பதிவிட்டுள்ளேன்.

====>> குண்டலினி சக்தி நம்
முதுகுதண்டின் அடிப்பகுதியில்
குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று பார்த்தால் தனிமங்களே!! அத்தனிமத்தின் பெயர்
வெண்பாஸ்பரஸ்.
இந்த வெண்பாஸ்பரஸ்
காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை
கொண்டது. அதேபோல் நம் உடலில்
உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு
கீழேயும் காற்று செல்வதில்லை.
இங்கே ஒரு
சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை
வழியாக காற்றை மூலாதாரத்திற்கு
கொண்டு
செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு
வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல்
மேலே எழுகின்றது.
இதுவே யோகமுறையில்
குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம்
உடலின் வெப்பத்தை உண்மையில்
மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்த
வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே
எழுகின்றது.
அடுத்து அந்த அனல் மேலே எழும்பி
சுவாதிஷ்தானத்தை அடைகின்றது. அங்கே
உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மேலே
எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும்
வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்ப
டுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே
குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.
இதனால் அனல் மேலும் மேலே எழுந்து
மணிபூரகத்தை அடைகின்றது. அங்கே அது
வினைபுரியும் தனிமத்தின் பெயர்
ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை
குணமே வெடிப்பதாகும். எனவே
வெப்பநிலை
மேலும் அதிகரித்து அனாகதத்தை
அடைகின்றது.
அனாகதத்தில் உள்ள
தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம்
சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த
ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன்
எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும்.
எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து
விசுத்தியை அடைகின்றது.
ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள
தனிமத்தின் பெயராகும். இங்கேயும்
வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும்
நிகழ்ந்து மேலேறுகின்றது.
அடுத்ததாக உள்ள
சக்கரத்தின் பெயர் ஆக்கினை. அங்கே சுத்த
நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே
எழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும்,அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது என்றும்,
ஒரு குருவின்
பெருமைகளை வெறும் வார்த்தைகளால்
விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த
பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள்
அனுபவத்திற்கு வரும்போது நன்கு
விளங்கும் என்றும் கூறப்படுகிறது.
"சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவே
தரம் பார்த் துன்னை
பரம் ஆக்கிடு வான்"
ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல்
திறந்தலே வெற்றிட பூஜ்ஜிய
பரமநிலையாகும். பிரமநிலைக்கு மணிபூரக
சக்கரம் விழிப்படைதலே காரணம்.
பக்தி
நிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும்,
முக்தி நிலைக்கு சகஸ்ராரம்
விழிப்படைதலும்,
யோக நிலைக்கு சுவாதிஷ்டானமும்,
ஞானத்தேடலுக்கு மூலாதாரம்
விழிப்படைதலும் காரணமாகும்.
நாதத்தின்
மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு
விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.
மேலும் நாம் தியானத்தில் அமரும் போது
குண்டலினியானது புருவமத்தி அல்லது
சகஸ்ராரத்திலும், தூங்கும் போது
விசுத்தியிலும் தங்கும். அந்த அமிர்தமும்
விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது
விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்).
குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு
முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய்
விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக
அடையாளமாக காண்பது விந்தின்
வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ள
மூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து
வெம்மையானது நெருப்பாறாக மாறி
வரிவரியாக தடம் இருக்கும்.
மேலும் உடலில்
நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக
புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ்
விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ "U"
நாமத்தடம் விழும். இத்தடமானது இப்பூமியில்
உடல் விடும் வரை இருக்கும். கை விரலால்
தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத்
தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக
நெருப்பாற்றின் தடத்தினையும் காணலாம்.
சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின்
வழியாக அமிர்தமானது பிறை வடிவ
நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன்
வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று
பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்தி
சென்று உறைவிடமாய் கொள்கிறது. மேலும்
பொன்னை உரசினாற் போல் மேனியுடைய
தேமலானது உடலில் அதிகம் காணலாம்.
அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக
உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய
உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும்
வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு
கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.
உடல் அடையாளமாக சாதாரணமாகவே
உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும் மற்றும்
புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,
மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது
உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில்
ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு
உருண்டையாக இருந்துகொண்டு எதையும்
நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு
உறுத்தல் ஏற்படும்.

குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள்
இருக்கும் ‘வெளிப்படாதசக்தி’. அதாவது அது
தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை,
அப்படியொரு சக்தி உங்களுக்குள் இருப்பதைக்
கூட நீங்கள் அறியமாட்டீர்கள்.
ஆம், ‘அசையாத
வரை’ இல்லாதது போல் இருக்கும், ஆனால்
அது எழுச்சியுற்று, வெளிப்பட
ஆரம்பித்துவிட்டாலோ, இத்தனை சக்தியும்
உங்களுக்குள் தான் இருந்ததா என்று நீங்கள்
மலைத்துப் போவீர்கள்.
இக்காரணத்தினால்தான்
இந்த சக்தியை ‘சுருண்டு கிடக்கும் பாம்பாக’
குறித்தார்கள். சுருண்டு கிடக்கும் பாம்பு
நகர
ஆரம்பிக்கும் வரை, யார் கண்ணிலும் படாது.
அதேபோல் தான் உங்களுள் அமிழ்ந்திருக்கும்
இந்த சக்தி எழுச்சியுற்று நகரும் வரை, அதை
நீங்கள் உணரமாட்டீர்கள்.இந்த சக்தி
எழுச்சியுறும் போது, நீங்கள் கற்பனையில்
கூட நினைத்திடாதஅதிசயங்கள் உங்களுக்குள்
நடக்கத் துவங்கும். முற்றிலும் புதுவிதமான,
அபரிமிதமான சக்தியோட்டம் உங்களுக்குள்
நிகழ, அனைத்துமே வேறு வகையில்
இயங்கும்.
குண்டலினியை எளிமையாக விளக்க உங்கள்
வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point)
இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை
உருவாக்குவதில்லை.
எங்கோ ஓரிடத்தில் ஒரு
பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம்
இருக்கிறது, அதுதான் மின்சாரத்தை
உருவாக்குகிறது,ஆனால் அது உங்களுக்கு
நேரடியாக மின்சாரத்தை வழங்க
முடியாது.இந்த பிளக் பாயிண்ட்தான்
உங்களுக்குமின்சாரத்தைக் கொடுக்க
முடியும்.
பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தை
நினைத்துக்கூட பார்ப்பதில்லை, இல்லையா?
அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று
தெரியாமல் இருந்தாலும், ஒரு
மின்சாதனத்தை
இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால்,
அந்த சாதனம் வேலை செய்யும் என்பது
மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக்
குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட்
போலத்தான், அதுவே ஒரு மின்நிலையம்
அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக்
பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக்
பாயிண்ட். இதை இப்படிப் பார்க்கலாம். உடலில்
இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள்
கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார
சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக
இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக்
பாயிண்டைப்
போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5
பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும்
இருக்கிறது.ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப்
(bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக்
பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப்
பற்றிய
அனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போது
உங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க
முடியும். இப்படி உங்களுடைய பிளக்
அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக
சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள்
இருபத்தி நான்கு மணி நேரமும்
பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரி
தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய
அவசியம் கிடையாது. எனவே, உங்களில், பிளக்
சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிரு
க்கும்போது, நீங்கள் எல்லையில்லாத
சக்தியின் மூலத்தோடு தொடர்பு
கொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி.
யோகா செய்வதன் அடிப்படையே
அவர்களுக்குள் ஒரு சமநிலையை
ஏற்படுத்துவதுதான். அந்த சமநிலை
வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக்
பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள்.
அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது,
எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து
தொடர்பில் இருப்பீர்கள்.
சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள்
‘ஆழ்ந்து உணரும்’ ஆற்றலும் கூடுகிறது.
யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின்
இந்த நுண்ணுணர்வை அதிகரிக்க
உருவாக்கப்பட்டவை தான். ஆன்மீக
செயல்முறை என்றாலே உங்களின் உணரும்
திறனை அதிகரிப்பதற்குத்தான்… ஏனெனில்
உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவை
எல்லாம் நீங்கள் உணர்வதை சார்ந்தே
இருக்கிறது.

RAJAJI JS {22-8-17}